புதுதில்லி,டிச.31- பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ள மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை இதுவரை ஒதுக்கவில்லை என்றும் பாரபட்சம் காட்டுவதாகவும் அர சியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ள னர். இயற்கைப் பேரிடரால் பாதிக்கப் பட்ட குஜராத், அசாம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், உத்தர்கண்ட் மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு ரூ. 3,063.21 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்ட குழு இந்த ஒதுக்கீட்டை செய்துள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. குஜராத்திற்கு ரூ. 1,138.35 கோடி புயல் நிவாரண நிதியாகவும் அசாமிற்கு ரூ. 586.59 கோடியாகவும் ஒதுக்கப் பட்டுள்ளது. கர்நாடகத்திற்கு ரூ. 504.06 கோடியும், பாஜக ஆளும் மத்தியப்பிர தேசத்திற்கு ரூ.600.50 கோடியும் புயல், வெள்ள நிவாரண நிதி ஒதுக்கப்பட்டு ள்ளது. உத்தர்கண்ட்டிற்கு ரூ. 187.08 கோடியே ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, குஜராத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயும் மேற்கு வங்கத்திற்கு ரூ.300 கோடியும் ஒதுக்கிய நிலையில், தற்போது கூடுதலாக நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புகளை ஒன்றிய குழு நேரில் பார்வையிட்டு சென்று வெகுநாள் ஆகியும் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்னர் பிரதமருக்கு எழுதிய கடி தத்தில், தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பு க்கு உடனடியாக ரூ. 6,229 கோடியை ஒதுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தி த்தும் முறையிட்டுள்ளனர். ஆனாலும் மோடி அரசு தமிழகத்திற்கு பாரபட்சம் காட்டுவது தொடர்கிறது என்று அரசியல் கட்சியினரும் மக்களும் கொந்தளிப்புடன் கூறுகின்றனர்.