states

img

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனிதச் சங்கிலி

புதுதில்லி, மார்ச் 16 - ஒன்றிய பாஜக அரசின் எதேச்சதிகாரம், ஊழல், முறைகேடுகளுக்கு எதிராக ‘ஜனநாயகத்தைப் பாது காப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றம் முன்பு ‘மனிதச் சங்கிலி’ யாக அணிவகுத்தனர். புதனன்று அமலாக்கத்துறை இயக்குநரகம் நோக்கி பேரணி சென்ற எதிர்க்கட்சிகள், இதன் அடுத்த கட்டமாக மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதானி குழுமத்தின் ரூ. 17 லட்சத்து 80 கோடி பங்குச்சந்தை ஊழல்  குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புக்கள் விசாரணை நடத்த வேண்டும் எனவும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளு மன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

வியாழக்கிழமையன்றும் காலை 11 மணிக்கு மக்களவை அமளியுடனேயே கூடியது. அதேபோல மாநிலங்களவையிலும், ராகுல் காந்தி தனது லண்டன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக- வினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு அவைகளுமே பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப் பட்டது. 2 மணிக்கு மீண்டும் அவை நடவடிக்கைகள் துவங்கிய நிலையில், அப்போதும் அமளி தொடர்ந் தால், அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. இதனால் தொடர்ந்து நான்காவது நாளாக, நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை பாஜக-வினர் முடக்கினர். முன்னதாக, காலையில் ராகுல் காந்தி நாடாளு மன்றத்திற்கு வந்தார். இதனால் அவர் தனது லண்டன் பேச்சு நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்ப்பு இருந்தது. 

அதற்கேற்ப, “நான் இந்தியாவிற்கு எதிராக எதுவும் பேசவில்லை. அவர்கள் நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதித்தால், நான் என்ன நினைக் கிறேன் என்பதைச் சொல்வேன். ஆனால், நான்  பேசினால் அதை பாஜக விரும்பாது. இரு அவை களின் நடவடிக்கைகளும் விரைவில் தொடங்கும்” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் முடக்கின. இதனிடையே, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில் கூடி ஆலோசனையில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப் பினர்கள், அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை கோரி, பகல் 12 மணியள வில் நாடாளுமன்றம் முன்பு மனிதச் சங்கிலியாக அணிவகுத்தனர்.  காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதாதளம் தளம், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பாரத் ராஷ்டிர சமிதி, சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே), ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா, மதிமுக, ஆம் ஆத்மி, விடு தலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 15 எதிர்க்கட்சிகளைத் சேர்ந்த தலைவர் கள் மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.