புதுதில்லி, ஜன.21- எவ்வித காரணம் மற்றும் விளக்கம் இல்லா மல் சிறுபான்மை சமூக மாணவர்களின் வெளி நாட்டுப் படிப்புக் கடனுக்கான வட்டி மானி யத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரி வித்துள்ளார். சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாண வர்களுக்கான வெளிநாட்டுப் படிப்புகளுக்கான கல்விக் கடன் வட்டி மானியத் திட்டம் “பதோ பர்தேஷ் திட்டம்” ஆகும். இந்த திட்டத்தால் சிறு பான்மை சமூக மாணவர்கள் வெளிநாட்டுக் கல்வியை எளிதாக, சிரமமின்றி பெற்று வந்த நிலையில், ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகம் (MoMA) 2022-23 முதல் பதோ பர்தேஷ் வட்டி மானியத் திட்டத்தை நிறுத்துவ தாக அனைத்து வங்கிகளுக்கும் இந்திய வங்கிகள் சங்கம் மூலம் கடந்த மாதம் அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. பதோ பர்தேஷ் திட்டம், முதன்மை வங்கியான கனரா வங்கி மூலம் செயல்படுத்தப் பட்டு வரும் நிலையில், மார்ச் 31, 2022 வரை பயன்பெற்ற பயனாளிகள் மட்டுமே இனி கடனுக் கான வட்டி மானியத்தைத் தொடர்ந்து பெறுவார் கள் என ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சக அறிவுறுத்தலின்படி இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது.
“பதோ பர்தேஷ் திட்டம்” திடீரென நிறுத்தப் பட்டதற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை; ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகமும் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவ தற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்று மூத்த வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூன் 2006-இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் சிறுபான்மையினர் நலனுக்கான பதினைந்து அம்சத் திட்டத்தின் ஒரு பகுதியாக சிறுபான்மை சமூகங்களின் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் வெளிநாடுகளில் முதுகலை, எம்.பில், பிஎச்.டி நிலைகளில் கல்வி பெறவும், அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தவும் வட்டி மானியம் வழங்குவதற்காக “பதோ பர்தேஷ்” திட்டத்தை தொடங்கினார்.
இந்தத் திட்டத்தின் கீழ் கல்விக் கடனைப் பெறும் மாணவர்கள் இந்திய வங்கிகள் சங்கத்தின் கல்விக்கடன் திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தடைக்காலத்தில் (அதாவது படிப்பு காலம், வேலை கிடைத்து ஒரு வருடம் அல்லது ஆறு மாதங்கள்) செலுத்த வேண்டிய வட்டி இந்திய அர சால் செலுத்தப்படுகிறது. தடைக்காலம் முடிந்த பிறகு, தற்போதுள்ள கல்விக் கடன் திட்டத் தின்படி, நிலுவையில் உள்ள கடன் தொகைக் கான வட்டியை மாணவர் செலுத்த வேண்டும். முதன்மைத் தவணைகள் மற்றும் தடைக் காலத்திற்கு அப்பாற்பட்ட வட்டியை விண்ணப்ப தாரர் ஏற்றுக்கொள்வார். இத்திட்டத்தின்படி 35% இடங்கள் மாணவிக ளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மாணவிகள் இல்லாத பட்சத்தில் ஆண் மாணவர்களுக்கு அந்த இடங்களை மாற்றலாம். சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, 2020-21ஆம் ஆண்டில், திட்டத்தின் கீழ் புதிய மற்றும் புதுப்பித்த விண்ணப்பதாரர்களின் வட்டி மானியத்தை திருப்பிச் செலுத்துவதற்காக கனரா வங்கிக்கு ரூ.20.20 கோடி விடுவிக்கப்பட்டது என கூறப் பட்டுள்ளது. இந்நிலையில் சிறுபான்மை சமூக மாணவர்க ளின் வட்டி மானியத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத் தில் அவர், “சிறுபான்மையினருக்கான கல்வி உத வித்தொகையை மோடி அரசு முதலில் ரத்து செய்தது. தற்போது சிறுபான்மை சமூக மாணவர்க ளின் வெளிநாட்டுப் படிப்புக்கான கடனுக்கான வட்டி மானியத்தையும் ரத்து செய்துள்ளது. இதுதான் மோடி சொல்லும் ‘ஜனநாயகத்தின் தாயகமா?’ மத வேறுபாடின்றி அனைத்து இந்தி யர்களுக்கும் சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஜன நாயகம் நிறுவப்பட்டுள்ளது” என குறிப் பிட்டுள்ளார்.