states

img

அதிர்ந்தது அதானியின் கோட்டை

புதுதில்லி, ஜன. 27 - அதானி குழுமம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபடுவதாக வெளியான ஆய்வறிக்கை, இந்தியாவின் நம்பர்  ஒன் பணக்காரரான கவுதம் அதானிக்கு பேரிடியாக மாறியுள்ளது. யாருமே எதிர்பாராத வகையில், அதானி குழும  நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த வர்கள், அந்த முதலீட்டை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கத் துவங்கி யுள்ளனர். இதனால், அதானி குழும பங்குகள் ஒரே நாளில் 20 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்து இருப்பதுடன், ரூ. 2 லட்சத்து 75  ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பையும் சந்தித்து உள்ளது. உலகப் பெரும்பணக் காரர்களின் வரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த அதானி, ஒரே நாளில்  7-ஆவது இடத்திற்கு இறங்கியுள்ளார்.

ஆய்வறிக்கை

இவ்வளவுக்கும் காரணம், ‘ஹிண்டன்பர்க் ரிசா்ச்’ (Hindenburg Research) வெளியிட்ட ஒரு ஆய்வறி க்கைதான். அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பா்க் ரிசா்ச்’ கடந்த புதன்கிழ மையன்று அதானி குழுமம் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.  அதில், “அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள், தங் களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டி, அதன் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பாா்ப்பது, வெளிநாடுகளில் ‘ஷெல்’ நிறுவனங்களை - அதாவது போலி நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் ஈடுபடுவது” என  சட்டத்துக்கு புறம்பான மிக வெட்கக் கேடான பங்கு கையாளுதல் மூலம் பல  ஆண்டுகளாக கணக்கியல் மோசடி யில் ஈடுபட்டு வருகிறது” என்று குற்றம் சாட்டியிருந்தது. கடந்த 2 ஆண்டு களாக மேற்கொண்ட ஆய்வின் வழி யாகவே, அதானி குழுமத்தின் இந்த மோசடியைக் கண்டறிந்ததாகவும் அது கூறியிருந்தது. அதாவது அதானி குழுமத்தின் வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி  ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம், போலியான பெயரில் நிறுவனங்கள், உறவினர்களை பயன்படுத்தி போலி யான பரிவர்த்தனை அறிக்கை ஆகி யவை நடந்து வருகின்றன. நிதி நிலை மை வலுவாக இல்லை. ஆனால், வலு வாக இருப்பதுபோல காட்டி முதலீட்டா ளர்களை ஏமாற்றி வருகிறது. அதானி குழுமத்தின் வளர்ச்சி உண்மையானது அல்ல. அந்த வளர்ச்சி ஒரு நீர்க்குமிழி, அது எந்நேரமும் உடையலாம் என்ற ரீதியில் அறிக்கையில் குறிப் பிட்டிருந்தது.

ஓட்டைக் கப்பல்

அதானி குழுமம் ஒரு ஓட்டைக் கப்பல் என்று ‘ஹிண்டன்பா்க் ரிசா்ச்’ அறிக்கை கூறியதைத் தொடர்ந்து, அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள், சத்தமில்லாமல் தங் களின் முதலீட்டை எடுத்துக் கொண்டு ஓடத் துவங்கியுள்ளனர். ‘ஹிண்டன்பா்க் ரிசா்ச்’ அறிக்கை வெளியான ஜனவரி 25-ஆம் தேதி மட்டும் அதானி குழும பங்குகள், சுமார்  1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்தன. வியாழக் கிழமையன்று குடியரசு நாளன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை என்ப தால், அன்றைய தினம் பாதிப்பு எதுவும் தெரியவில்லை. ஆனால், வெள்ளிக் கிழமையன்று காலை பங்கு வர்த்தகம் துவங்கிய உடன், மீண்டும் அடி விழத் துவங்கியது.

அதானியின் 10 நிறுவன பங்குகளும் சரிவு

ஆரம்ப வர்த்தக நேரத்தில், அதானி குழுமம் சுமா ரூ. 2 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை இழந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட அதானி குழுமத்தைச் சேர்ந்த 10 நிறுவனங்களின் பங்குகளும் கடும் அடி வாங்கின.  அதானி டோட்டல் கேஸ் 17.2 சத விகிதம், அதானி டிரான்ஸ்மிஷன் 12.43  சதவிகிதம், அதானி கிரீன் எனர்ஜி 12.41 சதவிகிதம், அதானி எண்டர்பிரைசர்ஸ் 3.88 சதவிகிதம், அதானி பவர் 5 சத விகிதம், அதானி வில்மர் மற்றும் என்டி டிவி 5 சதவிகிதம், அதானி துறைமுகங் கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவன பங்குகள் 4.80 சத விகிதம், ஏசிசி லிமிடெட் 6.07 சதவிகிதம், அம்புஜா சிமெண்ட்ஸ் 8.13 சதவிகிதம் என சரிவைச் சந்தித்தன. இதில், அதானி பவர், அதானி வில்மர் மற்றும் என்டிடிவி ஆகியவற்றின் பங்குகள் லோயர் சர்கியூட் அளவீட்டைத் தொட்டன. இதனால், அதானி குழும பங்கு முதலீட்டாளர்கள் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான இழப்பைச் சந்தித்தனர்.  செவ்வாய்க்கிழமையன்று வர்த்தக நேர முடிவிலிருந்து வெள்ளிக்கிழமை காலைக்குள், அதானி குழுமமானது, தனது சந்தை மூலதன மதிப்பில் ரூ. 2  லட்சத்து 75 ஆயிரம் கோடியை இழந்துள் ளது. இது அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பி லும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதானி மிரட்டல்

இதனிடையே எதிர்பாராத அறிக்கை மூலம், விழுந்த பெரும் அடியால் அதிர்ந்து போயிருக்கும் அதானி குழுமம், ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனம் மீது கடும் ஆத்திரம் அடைந்துள்ளது. “தவறான குறிக்கோளுடன் போதிய ஆய்வு  செய்யாமல் ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள் ளது” என்று குற்றம் சாட்டியுள்ளது. “இந்த குற்றச்சாட்டுகள் ஆதார மற்றவை.  இது தவறான தகவல். இது எங்களின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வந்த அறிக்கை. எங்களின் வீழ்ச்சி யில் ‘ஹிண்டர்ன்பர்க்’ பலனடைய பார்க்கின்றது. முதலீட்டாளர்கள் எங்கள் மீது  வைத்துள்ள நம்பிக்கையை தகர்க்க பார்க் கிறார்கள்” என்று கூறியிருக்கும் அதானி குழுமம், இப்படியொரு அறிக்கையை வெளியிட்ட ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறு வனத்தின் மீது சட்டப்பூர்வ  நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவ தாகவும் அறிக்கையில் மிரட்டியுள்ளது. ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ சவால்

ஆனால், அதானி குழுமத்தின் இந்த எச்ச ரிக்கை தொடர்பாக டுவிட்டரில் பதி லளித்துள்ள ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’’ நிறுவ னம், “முடிந்தால் வழக்கு தொடருங்கள்..’’ என்று அதிரடியாக சவால் விடுத்துள்ளது. “எங்களது அறிக்கையின் முடிவில் அதானி குழுமத்திற்கு 88 நேரடிக் கேள்வி களை எழுப்பியிருந்தோம். ஆனால், 36 மணி நேரமாகியும் அதில் ஒரு கேள்விக்குக் கூட பதில் வரவில்லை. இந்நிலையில், எங்கள் மீது வழக்குத் தொடரப்போவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இருந்தாலும், இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாட்டி லிருந்து துளியும் பின்வாங்கப் போவ தில்லை. எங்களது ஆய்வறிக்கையை சட்ட ரீதியில் எதிர்க்க வேண்டுமென்று அதானி குழுமம் உண்மையிலேயே நினைத்தால், நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காவிலுள்ள ஒரு நீதிமன்றத்தில் அந்தக் குழுமம் வழக்கு தொடரலாம். அவ்வாறு தொடா்ந்தால், சட்டப்பூர்வ ஆய்வுக் காக நாங்கள் அதானி குழுமத்தின் ஏராளமான முக்கிய ஆவணங்களைத் தருமாறு நீதிமன்றத்தில் கேட்போம். நாங்கள் போதிய அளவில் ஆய்வு செய்யா மல் அந்த ஆய்வை வெளியிட்டுள்ளதாக அதானி குழுமம் கூறுவது தவறு. எங்கள் ஆய்வின்போது, அதானி குழுமத்தில் பணி யாற்றிய முன்னாள் செயல் அதிகாரிகள் 12-க்கும் மேற்பட்டோரிடம் பேசியும், ஆயி ரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தும், 6க்கும் மேற்பட்ட நாடுகளின் அதி காரப்பூர்வ தளங்களிலிருந்து தகவல்களை திரட்டியிருக்கிறோம். முதலீட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், குடிமக்கள் மட்டு மல்ல, அரசியல்வாதிகள் கூட பழிவாங்கப் படுவோமோ என்ற அச்சத்தில் வெளிப்படை யாகப் பேச பயப்படுவதால், அதானி குழுமம் பட்டப்பகலில் மிகப்பெரிய, அப்பட்டமான மோசடியைச் செய்ய முடிந்தது என்று நாங்கள் நம்புகிறோம். 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆய்வு செய்து, பல்வேறு தகவல்களைத் திரட்டி உண்மையைத் தெரிந்துகொண்ட பிறகே எங்களது ஆய்வறிக்கையை வெளியிட்டோம்” என்று ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ தெரிவித்துள்ளது.

சுப்பிரமணியசாமி கிண்டல்

அமெரிக்கச் சந்தை ஆய்வு நிறுவன மான ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்புத் தெரிவித்திருந்தது. ஆனால், தங்களின் குற்றச் சாட்டுக்களுக்கு ஆதாரம் இருக்கிறது என்று ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனம் அதானி குழுமத்திற்கு பதிலளித்து இருந்தது. இந்த பதிலை, தனது டுவிட்டர் பக்கத்தில் டேக் செய்திருக்கும் பாஜக தலைவர் சுப்பிர மணியசாமி, “அதானி குழுமத்துக்கு எதிராக கயிறு இறுகுகிறதா? இதனை மோடியால் தாங்கிக்கொள்ள முடியுமா?” என்று பதிவிட்டு கிண்டலடித்துள்ளார்.