states

‘ஜியோ’ நெட்வொர்க் பக்கம் சாய்ந்த ‘ஐஓசி’

புதுதில்லி, டிச. 24 - ‘ஐஓசி’ எனப்படும் ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்’ இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றாகும்.  இந்த நிறுவனம், தனது பெட்ரோல் நிலை யங்களிடையே நெட்வொர்க் இணைப்பை உருவாக்குவதற்காக ரிலையன்ஸ் குழு மத்தின் ‘ஜியோ’ நிறுவனத்தை நாடியுள்ளது. இதுகுறித்து ஐஓசி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “நாடு முழுவதும் உள்ள தங்களது நிறுவனத்தின் பெட்ரோல் நிலையங்களில் 5-இல் ஒரு பகுதியை இணையதளம் மூலம் இணைத்து நிர்வாக சேவைகளையும் வழங்குவதற்காக, ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம் தோ்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனம், எங்களது 7,200 பெட்ரோல் நிலையங்களிடையே எஸ்டி-வான் (சாப்ட்வேர் டிபைண்டு வைட் ஏரியா நெட் வொர்க்) இணைப்பை ஏற்படுத்தி 24 மணி நேரடிக் கண்காணிப்பு, தினசரி விலை மாற்றத்தை உடனுக்குடன் அறிவிப்பது, எளிமையான பணப் பட்டுவாடா, தொலை தூரக் கணினி கட்டுப்பாடு போன்ற பல்வேறு அதிநவீன சேவைகளை அளிக்கும்” என்று தெரிவித்துள்ளது. இதேபோல ‘ரிலையன்ஸ் ஜியோ’ வெளி யிட்டுள்ள அறிக்கையில், “ஐஓசி நிறுவ னத்தின் சேவைகள் எண்மமயம் ஆக்குவ தற்கான பணிகளில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறியுள்ளது.