states

img

16 சதவிகிதம் வரை உயரும் டீ, காபி, பால், நூடுல்ஸ் விலைகள்!

புதுதில்லி, மார்ச் 19- இந்தியாவில் நுகர்வோர்களால் அன் றாடம் அதிகம் பயன்படுத்தப்படும் தேயிலை, காபி, பால் மற்றும் நூடுல்ஸ்  போன்றவற்றின் விலைகள் 2.5 சதவிகிதம்  முதல் அதிகபட்சம் 16 சதவிகிதம் வரை  விலை உயரும் நிலை உருவாகியுள்ளது.  உக்ரைன் - ரஷ்யா இடையே மோத லைத் தூண்டிவிட்ட அமெரிக்கா, அந்த மோதலையே காரணமாக வைத்து, ரஷ்யா  வுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இது உலகளவில் வர்த்த கச் சந்தைகளில் ஏற்படுத்திய தாக்கத் தால், அத்தியாவசியப் பொருட்களின் விலை வாசி உயர்வாக மாறியுள்ளது. பிரச்சனை துவங்கிய உடனேயே இந்தி யாவில் சமையல் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தன. போருக்கு முன்பு வரை சூரியகாந்தி எண்ணெய் 1 லிட்டர் ரூ. 140-க்கு விற்கப்பட்டது.

போர் தொடங்கிய பின்னர் இந்த விலை ரூ. 165 முதல் 178  வரை உயர்ந்துள்ளது. இதுவே சில்லரை விற்பனையில் ஒரு லிட்டர் ரூ. 196 வரை விற் கப்படுகிறது. இதேபோல பாமாயில் விலையும் ரூ. 125-இல் இருந்து ரூ.170 ஆக உயர்ந்துள்ளது.  எண்ணெய் விலை மட்டுமல்லாது, கோதுமை விலையும் 50 கிலோ மூட் டைக்கு ரூ. 100 உயர்ந்துள்ளது. இதனால்  மைதா, ரவை ஆகியவற்றின் விலை கிலோ விற்கு ரூ. 5 முதல் ரூ. 10 வரை அதிகரித் துள்ளது.  இதன் அடுத்தகட்டமாகவே தற்போது காபி, தேயிலை, பால், நூடுல்ஸ் போன்ற அன்றாடப் பயன்பாட்டு பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளது.  இந்தியாவை பொறுத்தவரை நுகர் வோரால் அதிகமாக வாங்கி பயன் படுத்தப்படும் (Fast-Moving Consumer Goods - FMCG) பொருட்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களாக ‘நெஸ்லே இந்தியா’ (Nestle India Ltd) மற்றும் ‘இந்துஸ்தான் யூனிலீவர் லிமி டெட்’ (Hindustan Unilever Limited-HUL) நிறுவனங்கள் உள்ளன. இந்த இரு நிறுவனங்களுமே விலை உயர்வை அறி வித்துள்ளன. ‘இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்’ நிறுவனம் தன்னிடம் உள்ள ப்ரூ காபி பவுடரின் விலையை 3 முதல் 7 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளது.

கோல்டு காபி விலை 3 சதவிகிதம் முதல் 4 சதவிகிதம் வரை அதிகரி்க்கப்பட்டுள்ளது. ப்ரூ இன்ஸ்டண்ட் விலை 3 முதல் 6.6 சதவிகி தம் வரை உயர்ந்துள்ளது. அதே போல்  தாஜ்மஹால் தேயிலைத் தூளின் விலை யும் 3.7 சதவிகிதத்தில் இருந்து 5.8 சதவிகி தம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.  இதேபோல் ‘நெஸ்லே இந்தியா’ நிறு வனமும் தனது தரமான முதல் தர பால் பவுடர் விலையை ரூ. 75-இல் இருந்து ரூ. 78-ஆக (4 சதவிகிதம்) உயர்த்தியுள்ளது.  ‘நெஸ்கபே’ கிளாசிக் காபித் தூளின் விலையும் 25 கிராம் பேக் ஒன்று ரூ. 78-இல் இருந்து ரூ. 80 (3 முதல் 7 சதவிதம் உயர்வு) ஆகியுள்ளது. 50 கிராம் பேக்கின் விலை 3.4 சதவிகிதம் அதிகரித்து ரூ.  145-இல் இருந்து ரூ. 150 ஆக உயர்ந்துள் ளது. இந்தியர்களால் அதிக அளவில் விரும்பி உண்ணப்படும் உணவான ‘மேகி நூடுல்ஸ்’ விலை 9 முதல் 16 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.

விலை உயர்வுக்கு பிறகு தற்போது 70 கிராம் மேகி மசாலா நூடுல்ஸின் விலை ரூ. 12-இல் இருந்து ரூ. 14 ஆகியுள்ளது. 140 கிராம் மேகி மசாலா நூடுல்ஸின் விலை ரூ. 3 (12.5 சதவிகி தம்) அதிகரித்துள்ளது. ரூ. 96-க்கு விற்கப் படும் மேகி நூடுல்ஸ், இனி 105 ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது. இதனுடன், பால் மற்றும் காபி பவுடர் விலையும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள் ளது. ஏற்கெனவே, 2022 ஜனவரியில் நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையிலான இந்தியாவின் சில் லரை பணவீக்கம் 6.07 சதவிகிதமாக அதி கரித்து உள்ளது. இறைச்சி, மீன் ஆகிய வற்றின் பணவீக்க விகிதம் 7.45 சதவிகி தம், முட்டை பணவீக்க விகிதம் 4.15 சதவிகி தம், தானியங்கள் மற்றும் இதரப் பொருட்க ளின் பணவீக்க விகிதம் 3.95 சதவிகிதம், சர்க்கரை, மிட்டாய் முதலான பொருட்க ளின் பணவீக்க விகிதம் 5.41 சத விகிதம் என்ற அளவில் உயர்ந்ததே இதற்கு கார ணம் என்பது குறிப்பிடத்தக்கது.