தபன்சென் அறிக்கை
புதுதில்லி, மார்ச் 9- தமிழ்நாட்டில், நாட்டின் பல்வேறு பகுதி களிலிருந்தும் தங்கள் வாழ்வாதாரங்களுக்காக வேலை செய்துவரும் புலம்பெயர் தொழிலா ளர்களின் மத்தியில் பீதியை ஏற்படுத்தி, உழைக் கும் மக்களைப் பிரித்தாள முயலும் மதவெறி-பிளவுவாத சக்திகளின் இழி முயற்சிகளை முறி யடித்திடுவோம் என்று சிஐடியுவின் பொதுச் செய லாளர் தபன்சென் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் நாட்டின் பல்வேறு பகுதி களிலிருந்தும் தங்கள் வாழ்வாதாரங்களுக்காக வேலை செய்துவரும் புலம்பெயர் தொழிலா ளர்களின் மத்தியில், ஊடகங்கள் மூலமாகப் பொய்ச் செய்திகளைப் பரப்பி, உழைக்கும் மக்கள் மத்தியில் பிளவினையும், இணக்கமற்றப் போக்கையும் உருவாக்கிட மதவெறி/பிளவு வாத சக்திகள் மேற்கொண்டிருக்கும் இழிவான முயற்சிகளுக்கு சிஐடியு தன் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. கடந்த சில தினங்களாக ஊடகங்கள் வாயி லாக, தமிழ்நாட்டில் வேலை செய்யும் பீகார் தொழிலாளர்கள் கடுமையாக அடித்துநொறுக் கப்படுவதாகக் காட்டப்படும் ஒரு வீடியோ விரி வான முறையில் சுற்றுக்கு விடப்பட்டிருக்கிறது. இது பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் மற் றும் பல மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் பீதியை உருவாக்கி இருக்கிறது. மேலும் வட நாட்டின் பல்வேறு மாநிலங்களி லிருந்தும் தமிழ்நாட்டிற்கு வந்து வேலை செய்தி டும் புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியிலும் கடும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜக வினால் தலைமை தாங்கப்படும் சக்திகள் தங்க ளுடைய குறுகிய அரசியல் லாபத்திற்காக இவ் வாறு பொய்ச் செய்திகள் சுற்றுக்கு விடப்பட்டி ருப்பது வெளிப்படையாகவே நன்கு தெரி கிறது.
தமிழ்நாடு அரசாங்கமும், அதன் காவல் துறையும் விரைந்து நடவடிக்கைகளில் இறங்கி, இவ்வாறு எவ்விதமான சம்பவமும் தமிழ் நாட்டில் நடைபெறவில்லை என்றும் இவை அனைத்தும் ஏற்கனவே எங்கோ நடைபெற்ற வீடியோ காட்சிகளை, தமிழ்நாட்டில் நடந்தது போல் பொய்யாக ஜோடனை செய்து பரப்பப் பட்டிருக்கின்றன என்பதையும் கண்டறிந்தி ருக்கிறது. மேலும் அவ்வாறு பரப்பியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தி ருக்கிறது. சாமானிய மக்கள் மத்தியில், குறிப் பாக உழைக்கும் மக்கள் மத்தியில் பீதியை ஏற் படுத்த வேண்டும் என்றும் ஒருவர்க்கொருவர் இடையே வன்மத்தையும் வெறுப்பையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே யும் இழிபிறவிகள் இத்தகு செயல்களில் இறங்கி இருக்கிறார்கள். இவ்வாறு பொய்ச் செய்தி களைப் பரப்பியவர்களில் தமிழ்நாட்டின் பாஜக மாநிலத் தலைவரும் பாஜக-வின் உத்தரப்பிர தேச செய்தித்தொடர்பாளர் ஒருவரும் ஈடுபட்டி ருக்கின்றனர். இத்தகைய இழிசெயல்களை சிஐ டியு வன்மையாகக் கண்டனம் செய்கிறது. இத்த கைய இழிசெயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் தண்டனை விதித்திட வேண்டும் என்றும் சிஐடியு கோருகிறது.
துரோகம் செய்யும் பாஜக
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருந்த சமயத்தில், புலம்பெயர் தொழி லாளர்களின் பாதுகாப்பிற்காகக் கொண்டு வரப்பட்ட 1979ஆம் ஆண்டு மாநிலங்களுக்கி டையே புலம்பெயர் தொழிலாளர்கள் பாது காப்புச் சட்டத்தை ரத்து செய்து, புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் துரோகத்தைச் செய்தி ருப்பது பாஜக என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும். இந்தச் சட்டத்தை நாடு முழுதும் மாநில அர சாங்கங்கள் கறாராக அமல்படுத்த வேண்டும் என்று சிஐடியு கோருகிறது. சிஐடியுவின் தமிழ்மாநிலக்குழு, தன்னு டைய ஊழியர்கள் மூலமாக, மாநிலங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை அணுகி, அவர் கள் எவராலாவது துன்புறுத்தல்களுக்கு ஆளா னார்களா என்று கேட்டறிந்திட வேண்டும். தொழி லாளர்களின் பணியிடங்களிலும், சமூகத்திலும் அமைதி மற்றும் நல்லிணக்கச் சூழ்நிலை இருப் பதை சிஐடியு உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
சதிகளுக்கு எதிராக விழிப்புணர்வு...
இறுதியாக முதலாளி வர்க்கத்திற்குப் பயன் அளிக்கும்விதத்தில், உழைக்கும் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்திட, மதவெறி-பிளவு வாத சக்திகள் மேற்கொள்ளும் சதி நடவடிக்கை கள் குறித்து உழைக்கும் மக்கள் விழிப்புடனி ருக்க வேண்டும் என்று தொழிலாளர் வர்க்கத்தை சிஐடியு கேட்டுக்கொள்கிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களின் உரிமை களுக்காகவும் போராட்டத்தை உக்கிரப் படுத்திட வேண்டும் என்று தொழிலாளர் வர்க்கத்தை அறைகூவி அழைக்கிறது. இத்தகைய மதவெறி/பிளவுவாத சக்தி களின் சதித்திட்டங்களை அம்பலப்படுத்திட வேண்டும் என்றும், இவர்களின் இத்தகைய மோசமான இழிசெயல்களுக்கு எதிராக எப்போ தும் விழிப்புடன் இருந்திட வேண்டும் என்றும் மக்களை, குறிப்பாக தொழிலாளர்களை சிஐ டியு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு தபன்சென் அறிக்கையில் கோரி யுள்ளார். (ந.நி.)