states

img

233 நிறுவனங்களுடன் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம்

அகமதாபாத், அக்.19- அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி யாற்றும் ஊழியர்கள் வாக்களிப்பதைக் கண்கா ணிக்கும் அபாயகரமான திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் கையில் எடுத்துள்ளது. இதனை சோதனை முயற்சியாக குஜராத் சட்ட மன்றத் தேர்தலில் நடைமுறைப்படுத்தும் வேலைகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக 233 தொழில் நிறுவ னங்களுடன் தேர்தல் ஆணையம் புரிந்து ணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தியாவில் வாக்களிப்பது கட்டாய மில்லை. முதிர்ச்சியான ஜனநாயகத்தை இந் தியா கொண்டிருப்பதன் அடையாளமாகவே, இந்தியாவில் வாக்களிப்பது கட்டாயப்படுத் தப்படவில்லை. ஒருவர் தனது வாக்கை அளிக்க விரும்பவில்லை என்பதும் கூட ஜனநாயகத்தில்  அங்கீகரிக்கப்பட்ட உரிமையாக வைக்கப்பட் டுள்ளது. 

இந்நிலையில்தான், பாஜக ஆளும் குஜராத்  மாநிலத்தில் இந்த உரிமையிலும் கை வைக்கப்  பட்டுள்ளது. வாக்களிக்காதவர்களை கண்கா ணிக்கும் அபாயகரமான திட்டத்திற்கு இந்திய  தேர்தல் ஆணையம் ஒத்துப் போயிருக்கிறது. இதற்காக, குஜராத்திலுள்ள சுமார் 233 தொழில் நிறுவனங்களுடன் இந்தியத் தேர்தல் ஆணை யம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெ ழுத்திட்டுள்ளது. மேலும், 1017 சிறு - குறு நிறு வனங்களுடன் இதுபோன்ற ஒப்பந்தம் மேற் கொள்ள திட்டமிட்டுள்ளது. அதாவது, தேர்தலைக் காரணமாக கூறி  விடுப்பு எடுக்கும் தனியார் நிறுவன ஊழி யர்கள், உண்மையிலேயே வாக்களிக்கிறார் களா.. இல்லையா? என்பதை கண்காணிப் பதுதான் இந்த திட்டமாகும். தற்போது தேர்தல் ஆணையத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் 233 தொழில் நிறுவனங்கள், கையெழுத்திட இருக்  கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களும்,  வாக்களிக்காத தங்கள் நிறுவன ஊழியர்களை அடையாளம் காணுவார்கள். பின்னர் அவர் களின் பட்டியலை தயாரித்து, அதை அவர்கள் இணையதளத்திலோ அல்லது அறிவிப்பு பலகைகளிலோ வெளியிடுவார்கள். இதே போல், மாநில பொதுத்துறை நிறுவனங்கள், அர சுத்துறையைச் சேர்ந்த ஊழியர்களும் கண்கா ணிக்கப்படுவார்கள்.

இவ்வாறு செய்வது, தொழில் நிறுவன ஊழி யர்கள் வாக்களிப்பதை உறுதி செய்வதோடு, வாக்கு சதவிகிதத்தையும் உயர்த்த உதவும் என்று குஜராத் தலைமை தேர்தல் அதிகாரி (CEO) பாரதி தெரிவித்துள்ளார். 500 ஊழியர்களுக்கு மேல் வேலை செய்யும் அரசு, பொதுத்துறை தனியார் மற்றும் வணிக  நிறுவன ஊழியர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய கண்காணிப்பு அதிகாரிகளை நிய மிக்க வேண்டும் என்று கடந்த ஜூன் மாதம் தேர்  தல் ஆணையம் அறிவுறுத்திய நிலையில், தற்போது 100 அல்லது அதற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களையும் இந்த திட்டத்தில் சேர்த்திருப்பதாக குஜராத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 135பி-யின்படி வாக்குப்பதிவு நாளன்று அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்  கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக  நிறுவனங்கள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும். ஒன்றிய - மாநில அரசுகளும், வாக்குப்பதிவு நாளை ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாளாக அறிவிக்கும். எனி னும், வாக்களிப்பதை கட்டாயப்படுத்தும் எந்த  முயற்சிகளும் இதுவரை மேற்கொள்ளப் பட்டது இல்லை. ஆனால், முதன் முறையாக  குஜராத்தில் தேர்தலில் வாக்களிப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் 233 தொழில் நிறு வனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தி ருப்பது, விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. விவாதங்களையும் ஏற்படுத்தி யுள்ளது.

இதற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பதிலளித்துள்ளார். அதில், “2019  பொதுத் தேர்தலின் போது குஜராத்தில் 7 மாவட்  டங்களில் குறைந்த அளவில் வாக்குப்பதிவு பதி வானது. அவற்றில் நான்கு பெருநகரங்கள் ஆகும். நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு சத விகிதம் குறையும்போது, ஒட்டுமொத்த மாநில வாக்கு சதவிகிதமும் குறைகிறது. சமகாலப் பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பதில் உள்ள  உற்சாகம் சமூக ஊடகங்களில் மட்டும் நின்று விடாமல், வாக்களிப்பதன் மூலமும் வெளிப்பட வேண்டும். வாக்குப்பதிவு நாளில் நிறுவனங்க ளில் ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படு கிறது. ஆனால் ஊழியர்கள் வாக்களிக்க முன்  வருவதில்லை. நகர்ப்புறங்களில் வாக்கு சத விகிதமும் குறைகிறது. அதனால் தற்போது இந்த முயற்சியை மேற்கொள்கிறோம். வாக்க ளிக்காதவர்களை வாக்களிக்க ஊக்குவிக்கி றோம். கட்டாய வாக்களிப்பை அமல்படுத்த  முடியாது. ஆனால் விடுமுறை அளிக்கப்பட்டும் வாக்களிக்காத பெரிய தொழில் நிறுவனங்க ளைச் சேர்ந்த ஊழியர்களை தேர்தல் ஆணை யம் அடையாளம் காண விரும்புகிறது. இது  கட்டாய வாக்களிப்பு நடவடிக்கையா? என்றால்,  கட்டாய வாக்களிப்பு இல்லை, வாக்களிக்காத வர்களை அடையாளம் காணும் முயற்சி மட்டுமே” என்று கூறியுள்ளார். இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு முயற்சி எந்த வகையிலும் ஏற்றுக்  கொள்ள முடியாதது என்றும், ஊழியர்களை கண்காணிக்கும் ஆணையம் நிறுவன உரிமை யாளர்கள் வாக்களிப்பதையும் உறுதி செய்  யுமா? மேலும், குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஊழியர்களை, தொழில் நிறு வன முதலாளிகள் நிர்ப்பந்தம் அளிக்க மாட்டார்  கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரு கின்றன.