புதுதில்லி, ஜுன் 5 - ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப் பது, இப்பிரச்சனையை முற்றிலும் திசை திருப்பி அதற்கு ஒரு கிரிமினல் வடிவம் கொடுக்க பாஜக அரசு மேற்கொண்டு ள்ள முயற்சி என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார். ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசார ணைக்கு ஒன்றிய மோடி அரசு உத்தர விட்டுள்ளது. எந்தவொரு ரயில் விபத்தை யும் முதலில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர்தான் விசாரிக்க வேண்டும் என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் அந்த விசாரணை நடப்ப தற்கு முன்பே சிபிஐ விசாரணை நடை பெறும் என ஒன்றிய அரசு அறிவித்திருப் பது, இந்த விபத்துக்கு ஒரு கிரிமினல் வடிவம் கொடுப்பதற்கான முயற்சியே ஆகும் என்று சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள பதிவில், ஒடிசா ரயில் விபத்து நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய ரயில்வேயின் உண்மையான நிலை என்ன என்பது குறித்து மிக விரிவான அறிக்கையை ரயில்வே வாரி யம் ஒன்றிய அரசுக்கு சமர்பித்திருந்ததை யும் சுட்டிக்காட்டி விவரித்துள்ளார்
மே 31 அன்று இந்திய ரயில்வே வாரி யத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் ரயில்வே நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள், அனைத்து ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்கள் ரயில்வே வாரியத் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றி ருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் ரயில்வே ஊழியர்களின் நிலை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு கடற்கரை ரயில்வே மற்றும் தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் நிலைமை மிக மோசமாக உள்ளது பற்றியும் அவர்கள் விவாதித்துள்ளனர். இக்கூட்டத்தில், ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) வரையறுக்கப்பட்ட வேலைநிறுத்தத்தைவிட மிக மிகக் கூடுதலான நேரம் பணியாற்றுமாறு நிர்ப்பந்திக்கப்படும் பிரச்சனை தீவிர மாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. விதி களின் படி ஒரு ஓட்டுநர் எந்தவொரு சூழலிலும் அதிகபட்சம் 12 மணி நேரத்திற்கும் மேல் பணியாற்றக்கூடாது. ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை. ஆள் பற்றாக்குறை காரணமாக 12 மணி நேரத்தையும் தாண்டி பல மணி நேரம் பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகிறார்கள். இது ரயில்வே பாதுகாப்பு விதிகளின்படி மிக மிகக்கடுமையான விதி மீறல் ஆகும் என்பதை ரயில்வே வாரியம் தீவிரமாக ஆலோசித்துள்ளது. ஸ்டேசன் மாஸ்டர்கள் துவங்கி, லோகோ பைலட்டுகள் உள்பட, கேங்மேன் வரையிலான பல தரப்பு ஊழியர்கள் ரயில்வேயில் உள்ளனர். குறிப்பாக போக்குவரத்து உதவியாளர் சரக்கு பாதுகாவலர் ஜுனியர் மற்றும் சீனியர் டைம் கீப்பர், ஜுனியர் மற்றும் சீனியர் எழுத்தர்கள் உள்பட ரயில்வேயில் சி-கிரேடு பணியிடங்கள் மொத்தம் 14லட்சத்து 75 ஆயிரத்து 623 உள்ளன. இவற்றில் 3.11லட்சம் பணியிடங்கள் முற்றிலும் காலியாக விடப்பட்டுள்ளன.
இதன்காரணமாக லோகோ பைலட்டுகள் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் கடுமையான பணிப்பளு ஒட்டுமொத்த ரயில்வே ஊழியர்களை யும் துயரத்தின் பிடியில் நிறுத்தி யுள்ளது. இதன்விளைவாக ரயில் விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2021 - 22ல் சிறிய அளவிலான ரயில் விபத்துக்கள் 35 நடந்தன; 2022-23ல் இது 48 விபத்துக்களாக அதிகரித்துள்ளது. இதில் பல விபத்துக்களில் சிக்னல் கோளாறு காரணமாக இருந்துள்ளது. கடும் பணிப்பளு காரணமாக ரயில் ஓட்டுநர்கள் விபத்துக்களை தவிர்க்க முயன்ற போதிலும், அதிக விபத்துக்கள் பதிவாகியுள்ளன. தென்கிழக்கு மத்திய ரயில்வேயில், நாளொன்றுக்கும் 12 மணி நேரத்திற்கும் மேலாக 2023 மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் முறையே 35.99 சதவீதம், 34.53 சதவீதம் மற்றும் 33.26 சதவீதம் கூடுதல் நேரம் லோகோ பைலட்டுகள் ரயிலில் பணி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டி ருக்கிறார்கள். இத்தகைய நிலைமை குறித்து ரயில்வே வாரியம் மிகத் தீவிரமாக விவாதித்தது என மே 31 தேதியிட்ட இந்து நாளிதழில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுப்போ, ஓய்வோ இல்லாமல் மிகக்கடுமையாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படும் பின்னணியில், அதை ரயில்வே வாரியமும் ஒன்றிய அரசுக்கு சுட்டிக்காட்டி இப்பிரச்சனையை தீவிர மாக எழுப்பியுள்ள நிலையிலும் அதைப் பற்றி ஒன்றிய மோடி அரசு வாய்திறக்க மறுக்கிறது என சீத்தாராம் யெச்சூரி சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய விபத்து தொடர்பாக விதிகளின்படி ரயில்வே பாதுகாப்பு ஆணையரே முதலில் விசாரிக்க வேண்டும்; அவரது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அதை ஆய்வு செய்ய வேண்டும், மாறாக இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை என்பதை அனுமதிக்க முடியாது; சிபிஐ விசாரணை என்பது இப்பிரச்சனைக்கு கிரிமினல் வடிவம் தருவதற்கான முயற்சியே என்றும் அவர் சாடியுள்ளார்.