states

img

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக ஆளும் உ.பி.க்கு முதலிடம்!

புதுதில்லி, ஜன.1- இந்தியாவிலேயே பெண்களுக்கு எதி ரான குற்றங்கள் நிகழும் மாநிலங்களில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் முதலி டத்தைப் பெற்றுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women - NCW) வெளியிட்ட தரவுகள் மூலம் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2021-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சுமார் 31 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் பதி வாகி இருக்கின்றன. 2020-இல் பெறப்பட்ட 23 ஆயிரத்து 722 புகார்களுடன் ஒப்பிடு கையில், 2021-இல் பெண்களுக்கு எதி ரான குற்றச்சம்பவங்கள் 30 சதவிகிதம் அதி கரித்துள்ளது.

அத்துடன், இந்த எண்ணிக்கை, 2014-க்குப் பிறகு பதிவான அதிகபட்ச குற்ற எண்ணிக்கை ஆகும். ஏனெனில், 2014-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 33 ஆயிரத்து 906 புகார்கள் அளவிற்கு பெறப்பட்டிருந்தன. 2021-லும் குற்ற எண்ணிக்கை அதிக ரித்து இருப்பதுடன், இவற்றில் சரிபாதிக் கும் அதிகமான குற்றங்கள் உத்தரப் பிர தேசத்தில் மட்டும் பதிவாகியுள்ளன. தேசிய மகளிர் ஆணையத் தரவு களின்படி, நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான 30 ஆயிரத்து 864 புகார்களில், அதிகபட்ச புகார்கள், மரியாதையுடன் வாழ்வதற்கு அனுமதிக்கப்படாதது என்ற உரிமையின் கீழ்- அதாவது, பெண்களுக்கு உணர்வுப்பூர்வமாக பாதிப்பை ஏற்படுத்து தல் வகைப்பாட்டிற்குள் அமைந்துள்ளன.

இவ்வாறு, பெண்களுக்கு உணர்வுப் பூர்வமாக பாதிப்பை ஏற்படுத்துவது தொடர்பான விஷயத்திலும் அதிகமான வழக்குகள் உத்தரப் பிரதேசத்தில்தான் பதி வாகியுள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிர தேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 15 ஆயிரத்து 828 ஆக பதி வாகியுள்ளது. அதைத் தொடர்ந்து தில்லி யில் 3,336 ஆகவும், மகாராஷ்டிராவில் 1,504, ஆகவும், ஹரியானாவில் 1,460 ஆகவும், பீகாரில் 1,456 வழக்குகளாகவும் பதிவாகியுள்ளன. வீட்டில் நடக்கும் வன்முறை தொடர் பாக நாடு முழுவதும் 6,633 வழக்குகளும், வரதட்சணைக் கொடுமை என்ற அடிப்ப டையில் 4,589 வழக்குகளும் பதிவாகி யுள்ளன.