states

img

உக்ரைனில் 13 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர்

புதுதில்லி, பிப்.27- உக்ரைனிலிருந்து சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி மூன்று விமா னங்கள் மூலம் 709 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். உக்ரையில் சுமார் 15 இந்தியர்கள் தங்கியுள்ளனர். ஏர் இந்தியாவின் இரண்டு விமா னங்கள் உக்ரைனிலிருந்து 490 இந்தி யர்களை அழைத்து வந்துள்ளதாக அதி காரப்பூர்வ தகவல்கள் தெரிவிக் கின்றன. ஒரு விமானம் ருமேனிய தலை நகர் புகாரெஸ்டிலிருந்தும் மற்றொன்று  ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டி லிருந்தும், உக்ரைனில் சிக்கித் தவித்த 490 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை தில்லி வந்தடைந்தது. ஏற்கனவே ஒரு விமானம் சனிக்கிழமை ருமேனிய தலைநகர் புகாரெஸ்டில் இருந்து மும்பைக்கு 219 பேரை அழைத்து வந்தது  இரண்டாவது விமானம், புகா ரெஸ்டில் இருந்து 250 இந்தியர் களை அழைத்துக்கொண்டு  ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 2.45 மணியளவில் தில்லி வந்தடைந்தது. மூன்றாவது விமானம், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்களை அழைத்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9.20 மணியளவில் தில்லி வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்தவர் களை ஒன்றிய சிவில் விமான போக்கு வரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ரோஜா பூக்களை வழங்கி வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிந்தியா, தற்போது உக்ரைனில் சுமார் 13,000 இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர் என்றார். மேலும் அவர் கூறுகையில், “உக்ரைனில் உள்ள சூழ் நிலையை பத்திரிகையாளர்கள் அறி வீர்கள். உணர்ச்சிகரமான நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களுடன் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். விரைவில் அனைவரையும் அழைத்துவருவோம் என்றார்.  நான்காவது விமானம் ஞாயிறன்று காலை 189 பயணிகளுடன் புகாரெஸ்டி லிருந்து புறப்பட்டு விட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.