states

img

தில்லியில் குடிசைப்பகுதியில் தீ விபத்து - 7 பேர் பலி

தில்லியில் குடிசைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
தலைநகர் தில்லியில் உள்ள கோகுல்புரி பகுதியில் உள்ள குடிசைகளில்  நேற்று இரவு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு சென்றனர். மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். 
இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.