states

img

பணமதிப்பு நீக்கத்தின் 6 ஆண்டுகள் மோடி அரங்கேற்றிய படுகொலை

சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்

புதுதில்லி, நவ.8- பண மதிப்பு நீக்கம் அம லாக்கப்பட்டு கடந்த 6 ஆண்டு  காலத்தில் மோடி அர சாங்கத்தின் அகம்பாவமான, இறுமாப்பு மிக்க நாசகர நட வடிக்கைகளால் இந்திய நாட்டின் பொருளாதாரமே கிட்டத்தட்ட படுகொலை செய்யப்பட்டு விட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி கடுமையாக சாடியுள்ளார். 2016 நவம்பர் 8 அன்று திடீரென பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பணமதிப்பு நீக்க அறிவிப்பு நாட்டின் பொருளாதாரத்தையே நிலைகுலைய செய்தது. இந்த  கொடிய அறிவிப்பின் 6 ஆம் ஆண்டு தினமான 2022  நவம்பர் 8 செவ்வாயன்று வெளியான புள்ளி விப ரங்களை சுட்டிக்காட்டியுள்ள சீத்தாராம் யெச்சூரி, பிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பு முற்றி லும் கிரிமினல்தனமானது என்று நாங்கள் கூறியது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என குறிப்  பிட்டுள்ளார்.

பணமதிப்பு நீக்க அறிவிப்புக்கு முன்பு 2016 நவம்பர் 4 அன்று நாட்டில் ஒட்டுமொத்த பொருளாதார நட வடிக்கைகளில் ரூபாய் நோட்டுக்களின் சுழற்சி  ரூ.17.97 லட்சம் கோடியாக இருந்தது. பணமதிப்பு நீக்க  அறிவிப்பின் விளைவாக, ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனை விரிவடையும் என்றும், கறுப்பு பணம் ஒழிந்து விடும் என்றும் பிரதமர் மோடி படாடோபமாக அறிவித்தார். ஆனால் 6 ஆண்டு களில் நிலைமை தலைகீழாக மாறி, ரூபாய் நோட்டு களின் சுழற்சி மேலும் 72 சதவீதம் - அதாவது ரூ. 12.91 லட்சம் கோடி அதிகரித்து 2022 அக்டோபர் 21 கணக்கின் படி ஒட்டுமொத்த ரூபாய் நோட்டுக்களின் சுழற்சி ரூ.30.88 கோடியாக அதிகரித்துள்ளது. இதை குறிப்பிட்டுள்ள சீத்தாராம் யெச்சூரி, மோடி காட்டிய படங்களிலேயே இதுதான் மிகப் பெரிய படம், குரூரமான படம்; 50 நாட்களுக்கு தான் சிரமங்கள் இருக்கும் என்று அவர் கூறியது, இதுவரை அவர் செய்த மோசடிகளிலேயே மிகக் கொடூரமான மோசடி; இந்திய பொருளாதாரத்தை அவரும், அவரது அரசும் படுகொலை செய்ததை தவிர வேறெதுவும் நடக்க வில்லை என்று விமர்சித்துள்ளார்.