புதுதில்லி, மார்ச்.21- நாட்டில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை யாக பாரத் பயோடெக் நிறு வனத்தின் ‘கோவாக்சின்’ தடுப்பூசியும், சீரம் இன்ஸ்டி ட்யூட் நிறுவனத்தின் ‘கோவி ஷீல்ட்’ தடுப்பூசியும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 181 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி கள் மக்களுக்கு செலுத்தப் பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் பொது மக்களுக்கு 2 டோஸ்களாக செலுத்தப்படுகின்றன. கோவாக்சின் தடுப்பூசி 28 நாட்கள் கால இடைவெளி யிலும், கோவிஷீல்ட் தடுப்பூசி 12 முதல் 16 வார கால இடைவெளியிலும் செலுத்தப்பட்டு வரு கிறது. தடுப்பு மருந்தின் நோய் எதிர்ப்பு திறன்அடிப்படை யில், 2-வது டோஸ்செலுத்து வதற்கான கால இடைவெளி நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் கோவி ஷீல்ட் தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்துவதற்கான கால இடைவெளி 8 முதல் 16 வாரங்களாக குறைக்கப் படுவதாக நோய்த் தடுப்புக் கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்டிஏஜிஐ) தெரிவித்துள் ளது. இந்த மாற்றம் விரை வில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவாக்சின் தடுப்பூசி யின் 2-வது டோஸ் செலுத்தும் கால இடை வெளியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. உலகளாவிய அறிவியல் சான்றுகளின் அடிப்படை யில், நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இந்த பரிந்துரையை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.