மகாராஷ்டிர மாநில தலை நகர் மும்பையில் ஏர் இந்தி யா ஏர்போர்ட் சர்வீசஸ் லிமி டெட் நிறுவனம் 2,216 இடங்க ளுக்காக நடத்திய நேர்காணலில் பங்கேற்க 25 ஆயிரத்துக்கும் அதி கமான பட்டதாரிகள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் வாகனங் கள், சரக்குகளை ஏற்றி இறக்குவது உள்ளிட்ட தரைவழி கையாளுதல் சேவைகளை வழங்கி வருகிறது. மும்பையில் உள்ள அந்நிறுவன நேர்காணலுக்கு 25 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் குவிந்த நிலையில் நிறுவனம் எந்த முன் னேற்பாடுகளும் செய்யாத கார ணத்தால் சூழ்நிலையை எதிர் கொள்ள இயலாமல் அப்பகுதி முழுவதும் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் நேர்காணலுக்கு வந்த இளைஞர்கள் உணவு, தண்ணீர், கழிவறைகள் உள்ளிட்ட அடிப் படை தேவைகள் இல்லாமல் பல மணி நேரம் காத்திருக்க நேரிட்ட தாகவும், அவர்களில் பலருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளதா கவும் கூறப்படுகிறது.
அதிகரித்துள்ள வேலையின்மைக் கொடுமை
இதே போல ஜூலை மாதத் துவக்கத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் விமான நிலைய பணிக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். அதன் பிறகு ஜூலை 11 அன்று குஜராத் மாநிலத்தில் ஒரு தனியார் துறை யில் நேர்காணலுக்காக ஆயிரக்க ணக்கில் இளைஞர்கள் குவிந்த காணொலி வெளியானது. இந் நிலையில் அதேபோல் மற்றொரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இது இந்தியாவில் இளைஞர்கள் சந்தித்து வரும் வேலையின்மை யின் உச்சத்தைக் காட்டி வரு கிறது. மோடி அரசு 2023 - 2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 4.6கோடி வேலைவாய்ப்புகளை ரிசர்வ் வங்கி ஜூலை 8 ஆம் தேதியன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால் அது ஆளும் கட்சியின் விருப்பத்தை நிறைவேற்றும் அறிக்கை தானே தவிர உண்மை நிலை மிக மோசமாக உள்ளது என இதே பாஜக அரசின் தரவுகள் உண் மையை வெளிக் கொண்டு வந்துள்ளன.
வேலையில்லா திண்டாட்டம்
மும்பையில் நடந்த இந்த நேர்காணலுக்காக 400 கி.மீ க்கு அதிகமான தூரத்தில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பல பட்டதாரி இளைஞர்கள் வந் துள்ளனர். அவர்களில் பெரும்பா லும் முதுகலை பட்டம் பெற்றவர்க ளாகவும், முதுகலை படிப்பவர்க ளாகவும் இருந்துள்ளனர். மேலும் பல இளைஞர்கள் வேலை கிடைத்தால் படிப்பை கைவிட்டு விடுவோம் எனவும், இந்த வேலை எங்கள் கல்வி தகுதிக்கு குறைவான வேலைதான். எனினும் தற்போதைய வேலையில்லா திண் டாட்டத்தில் எங்களுக்கு வேறுவழி இல்லை எனவும் தெரிவித்துள் ளனர். இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய தரவுகள் இந்திய பொருளாதாரக் கண்கா ணிப்பு மைய தரவுகளின் (CMIE) அடிப்படையில் 2013 முதல் இந்தி யாவில் வேலையின்மை தொ டர்ந்து உயர்ந்து வந்துள்ளது. 2024 ஜூன் மாதம் வேலையின்மையின் அளவு சுமார் 9.2 சதவீதமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது. மேலும் 2024 ஜூன் மாதம் நகர்ப்புறங்களில் 8.9 சதவீதமா கவும் கிராமப்புறங்களில் 9.3 சத வீதமாகவும் வேலையின்மை உயர்ந்துள்ளது எனவும் ஆண்க ளை விட பெண்களுக்கான வேலை வாய்ப்பின்மையே அதிகமாக உள்ளது எனவும் அத்தரவுகள் குறிப்பிட்டுள்ளன.