கேரளத்தில் 24 மணி நேர கடலோர வேலைநிறுத்தம்
ஒன்றிய அரசின் கடல் மணல் அள்ளு வதை எதிர்த்து மீனவர் ஒருங்கிணைப்பு குழு தலைமையில் கடலோர வேலைநிறுத்தப் போராட்டம் புதனன்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. இந்த 24 மணி நேர வேலை நிறுத்தம் காரணமாக காசர்கோடு முதல் திரு வனந்தபுரம் வரையிலான கடலோரப் பகுதி ஸ்தம்பித்தது. துறைமுகம் மற்றும் சந்தைகள் முற்றிலும் பிப்.27 வியாழனன்று நள்ளிரவு 12 மணி வரை மூடப்பட்டன. குறிப்பாக மீன் விநியோகம் உட்பட தொடர்புடைய துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்), ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்), லத்தீன் சபா, திவார் சபா, பல்வேறு அரசியல் கட்சிகள், ஜமாஅத்கள் இந்த வேலை நிறுத்தத்தை ஆதரிக்கின்றன.
இது வெறும் அடையாள போராட்டம்
வேலைநிறுத்தத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் திருவனந்தபுரத்தில் உள்ள தொழிலாளர்கள் புதன்கிழமை கடலுக்குச் செல்லவில்லை. வியாழக்கிழமை கடலோரப் பகுதியில் கடைகளை அடைத்து, வேலை நிறுத்தத்துக்கு வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் 125 மை யங்களில் காலை 9 மணிக்கு தொழிலாளர் களின் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. இது ஒரு அடையாள போராட்டம் எனவும், விரிவான தொடர் போராட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கத்தி னர் தெரிவித்துள்ளனர். அதாவது கடல் மணல் அள்ளுவதற்கு அனுமதி அளித்த ஒன்றிய அர சின் கொள்கையில் மாற்றம் கொண்டுவரக் கோரி, மார்ச் 12ஆம் தேதி தொழிலாளர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்துவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் தொடர் எதிர்ப்பு
கடல் கனிமச் சுரங்கம் தொடர்பான ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கேரள அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஏற்கனவே மூன்று முறை எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கேரள தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.