states

பாஜக ஆட்சியில் கலவரமே நடக்காதா? 2014 முதல் 2020 வரை மட்டும் 5,415 கலவரங்கள் நடந்துள்ளன!

புதுதில்லி, ஏப்.5- பாஜக ஆட்சியில் கலவரம் நடக்  காது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருந்த நிலையில், 2014 முதல் 2020 வரை மட்டும் நாட்டில் 5,415 வகுப்புவாத கலவரங்கள் நடந் துள்ளன என்று கபில் சிபல் பதிலடி கொடுத்துள்ளார். பீகார் மாநிலம் நவாடா மாவட்டம்,  ஹிசுவாவில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “2024ல் பிர தமர் நரேந்திர மோடி மீண்டும் பெரும்  பான்மையுடன் ஆட்சிக்கு வர வேண்  டும். அதற்கு பீகாரில் 40-க்கு 40 இடங்  களை பாஜகவுக்கு கொடுக்க வேண்  டும். அதுமட்டுமன்றி 2025-இல் பீகார்  சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனது சொந்த அரசாங்கத்தை அமைக்க உதவ வேண்டும். அவ்வாறு நடந்தால், கலவரக்காரர்களை தலைகீழாக தொங்கவிட்டு நேராக்கும் வேலையை  பாஜக செய்யும். எங்கள் ஆட்சியில் கல வரம் நடக்காது” என்று கூறியிருந்தார். இதற்குத்தான் ஒன்றிய முன்னாள்  அமைச்சரும், மூத்த வழக்கறிஞரு மான கபில் சிபல் பதிலடி கொடுத் துள்ளார். “எங்கள் ஆட்சியில் கலவரம் நடக்காது என்று அமித் ஷா கூறி யிருப்பது அவரது மற்றொரு சமா ளிப்பு. ஆனால், என்.சி.ஆர்.பி. தரவுக ளின்படி, 2014 முதல் 2020 வரையிலான காலத்தில் நாட்டில் மொத்தம் 5,415  வகுப்புவாத கலவரங்கள் நடந்துள் ளன. 2019-இல் மட்டும் 25 வகுப்புவாத கலவரங்கள் நடந்துள்ளன. உத்தரப் பிரதேசம் (9), மகாராஷ்டிரா (4), மத்தி யப் பிரதேசம் (2) ஆகிய மாநிலங்களில் வகுப்புவாத கலவரங்கள் நடந்துள் ளன” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் நடைபெற்ற வகுப்புவாத வன்  முறைச் சம்பவங்கள் குறித்து பிரதமர்  மோடி ஏன் மவுனமாக இருக்கிறார்?” என்று கேள்வி எழுப்பியிருக்கும் கபில்  சிபல், “வன்முறைக்கு 2024 மக்களவை  தேர்தல் காரணமாக இருக்கக் கூடாது” என்றும் தெரிவித்துள்ளார்.