states

img

ஹரியானாவில் 2 முஸ்லீம் இளைஞர்கள் எரித்துக் கொலை பசு குண்டர்கள் மீண்டும் அட்டூழியம்

பிவானி, பிப். 17 - ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சேர்ந்த நசீர் (25), ஜுனைத் (35) என்ற இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் சமீ பத்தில் காணாமல் போனதாக இளை ஞர்களின் குடும்பத்தினர் காவல்நிலை யத்தில் புகார் அளித்திருந்தனர். பரத்பூர் காவல்துறையினர் சைபர் கிரைம் மூலம் தேடுதலில் ஈடுபட்ட நிலையில், ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் காரில் எரிந்த நிலையில் 2 உடல்கள் கண்டெடுக்கப் பட்டன. தகவல் அறிந்த பரத்பூர் போலீ சார்  எரிந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ள சடலங்களை தடவியல் மூலம் ஆய்வு செய்து, முதற்கட்ட ஆய்வின் எரிந்த உடல்கள் நசீர்,  ஜுனைத் என்றும், கூடுதல் மாதிரிகள் டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பியுள்ள தாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இதில் ஜுனைத் மீது பசுக் கடத்தல் தொடர்பான 5 வழக்குகள் நிலுவை யில் உள்ளதாகவும், நசீர் மீது எந்த வொரு எந்த வழக்கும் இல்லை என்றும், நசீர் மற்றும் ஜுனைத்தை கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மோனு மானேசர், லோகேஷ் சிங்யா, ரிங்கு சைனி, அனில், ஸ்ரீகாந்த் ஆகிய 5 பேர் அடையாளம் காணப் பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என பிவானி  (ஹரியானா) மாவட்ட காவல்துறை அதிகாரி கௌரவ் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

பஜ்ரங் தள் குண்டர்கள்

நசீர், ஜுனைத்தை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மோனு மானேசர் இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் பசுக் காவலர்கள் என்று கூறிக்கொண்டு அப்பகுதியில் அட்டூழி யங்களில் ஈடுபட்டுள்ளதும் போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகி யுள்ளது. இந்த விவகாரத்தில் 5 பேர் மீது கடுமையான பிரிவின் கீழ் ராஜஸ்தான் காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.