19 வயது பெண்ணை 23 பேர் கொண்ட கும்பல் 7 நாட்கள் தொடர்ந்து பாலியல் வல்லுறவு
பிரதமர் மோடியின் தொகுதியில் கொடூரம்
நாடு முழுவதும் வலுக்கும் கண்டனம்
ரதமர் மோடி 3 முறை வெற்றி பெற்ற வாரணாசி மக்க ளவை தொகுதி பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநி லத்தில் உள்ளது. இந்த வாரணாசி நகரத்தில் மார்ச் 29 அன்று 19 வயது இளம்பெண் ஒருவரை அவரது நண்பர் கடத்திச் சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து அதே நாளில் இளம் பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து மேலும் 22 பேர் பாலி யல் பலாத்காரம் செய்தனர். இதில் கொடூரமான விஷயம் என்னவென்றால் 23 பேர் கொண்ட கும்பல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை அந்தப் பெண்ணை தொடர்ச்சி யாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பாலியல் வன்முறை கும்பலிடம் தப்பித்த இளம்பெண் ஏப்ரல் 6ஆம் தேதி வாரணாசி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். எப்ஐஆர் மட்டும் பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணின் உண்மை தன்மை குறித்து விசாரித்துள்ளனர். மோடிக்கு செக் வைத்த புலனாய்வு ஊடகங்கள் இந்நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை இளம்பெண் பாலியல் பலாத்கார சம்பவத்தை உத்தரப்பிரதேச பாஜக அரசு, காவல்துறை, பாஜக ஆதரவு பெற்ற “கோடி மீடியா” ஊட கங்கள் மூடி மறைத்தன. ஏப்ரல் 11ஆம் தேதி பிரதமர் மோடி வார ணாசிக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டார். அன்றைய தினம் காலை புலனாய்வு ஊடகங்கள் இளம்பெண் பாலியல் பலாத்கார சம்பவத்தை தலைப்புச் செய்தி யாக வெளியிட்டன. அதன் பின்னரே இந்த விஷயம் வெளியு லகுக்கு தெரியவந்தது. இதனை அறிந்த மோடி வாக்கு வங்கிக்கு பங்கம் ஏற்பட்டு விடும் என்று எண்ணி, உத்தரப்பிரதேச காவல் துறை அதிகாரியிடம் கடும் நடவ டிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்னர் காவல்துறையினர் 23 பேரில் 12 பேரை கைது செய்துள்ள தாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இந்த கும்பல் பாலியல் வன் கொடுமை சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.