புதுதில்லி, ஏப்.24- இந்தியாவில் கடந்த பத்து ஆண்டு களில் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவிற்கு பதில ளித்துள்ள தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) இந்தியாவில் 2011-2021க்கு இடையில் பாதுகாப்பற்ற உடலு றவு மூலம் 17,08,777 பேர் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2011-12-இல் 2.4 லட்சம் பேருக்கு எச்ஐவி பரவியது, 2020-21-இல் அது 85,268 ஆகக் குறைந்துள்ளது. மாநிலங்களைப் பொறுத்தமட்டில், ஆந்திரா- 3,18,814, மகாராஷ்டிரா- 2,84,577, கர்நாடகா- 2,12,982, தமிழகம்- 1,16,536, உத்த ரப்பிரதேசம்- 1,10,911, குஜராத்- 1,10,911 என பாதிக்கப்பட்டுள்ளனர். 2011-12 முதல் 2020-21 வரை 15,782 பேர் இரத்தம் வழியாக எச்ஐவி நோய் பரவி யுள்ளது.
2020- ஆம் ஆண்டு நிலவரப்படி, நாட்டில் 81,430 குழந்தைகள் உட்பட 23,18,737 பேர் எச்ஐவியுடன் வாழ்கின்றனர். எச்.ஐ.வி.யை முற்றாக குணப்படுத்த நவீன சிகிச்சை இல்லை. இருப்பினும், மருத்துவரின் கண்காணிப்பு, மாத்திரை களை உட்கொள்வதன் மூலம் பாதிக்கப் பட்டவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும். குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் மெமோ ரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் மருத்துவத் துறை இயக்குநர் சதீஷ் கவுல் கூறுகை யில், “எச்ஐவி நோயாளிகளை கண்டறி வதற்கும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கும் போதுமான வசதிகள் இந்தி யாவில் உள்ளன. நவீன மருத்துவ வசதி கள் கிடைப்பதால் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் எச்ஐவி தாக்கம் குறைந்து வருகிறது” என்றார்.
கொரோனா தொற்றுப்பரவலையடுத்து ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்ட தால், கடந்த இரண்டாண்டுகளில் எச்ஐவி யின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது என்கிறார் துவாரகா ஆகாஷ் ஹெல்த்கேர் மருத்துவ மனையின் மூத்த ஆலோசகர் பிரபாத் ரஞ்சன் சின்ஹா. அதே நேரத்தில் கொரோனா கட்டுப்பாடு கள் தளர்த்தப்பட்டுள்ளதால், எச்ஐவி பாதிப்போர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒருவருக்கு எச்ஐவி இருப்பது கண்டறியப்பட்டால் அவர் உட னடியாக ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை யை (ART) தொடங்க வேண்டும் என்ற கருத்தையும் கூறினார்.