குஜராத்தில் திடீர் கனமழை 14 பேர் பலி
காலநிலை மாற்றத்தால் நாட் டில் எப்பொழுது கனமழை பெய்கிறது, எப்பொழுது ஆதீத வெயில் கொளுத்துகிறது என்பதே கணிக்க முடியாத சூழல் உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒன்றிய அர சின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையமோ பெயரளவுக்கு மட் டுமே வானிலை அறிக்கைகளை வெளி யிட்டு வருகிறது. காலநிலை மாற்றத் துக்கு ஏற்ப வானிலை அறிக்கைகள் உறு தியாக இல்லாததால் நாட்டு மக்கள் வெயில் மற்றும் கனமழையால் சிக்கி கடு மையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக பலத்த காற்று டன், இடியுடன் கூடிய கனமழை வெளு த்து வாங்கி வருகிறது. சில இடங்களில் புழுதிப் புயலும் வீசி வருகிறது. இது தொடர்பாக மாநில அவசரகால செயல் பாட்டு மையம் (SEOC) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் மாநிலத்தின் 253 தாலுகாக்களில் 168 தாலுகாக்களில் பருவம் தவறிய மழை பெய்துள்ளதாகவும், கேடா, காந்தி நகர், மெஹ்சானா மற்றும் வதோதரா மாவட்டங்களில் 25 முதல் 40 மிமீ மழை பெய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கனமழைக்கு மாநிலம் முழுவதும் கடந்த 48 மணிநேரத்தில் 14 பேர் உயிரி ழந்ததாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளன. பலத்த மழை தொடரும் குஜராத் மாநிலத்தில் கனமழை தொட ரும் என்றும், அடுத்த 24 மணிநேரத்தில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது