புதுதில்லி,ஜன.21- தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) கடந்த நவம்பர் மாதத்தில் 13 லட்சத்து 95 ஆயிரம் சந்தாதாரர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். இது, முந்தைய அக்டோ பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2 லட்சத்து 85 ஆயிரம் அதிகம். 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடு கையில், 3 லட்சத்து 84 ஆயிரம் அதிகம். சந்தாதாரர்கள் அதிகரித்ததன் மூலம், பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து வேலைவாய்ப்பு பெருகி இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், இவர்களில் 5 லட்சத்து 67 ஆயிரம் பேர், வேலை இழந்து, வேறு வேலை யில் சேர்ந்து மீண்டும் வைப்புநிதி அமைப்பில் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.நவம்பர் மாதத்தில் சேர்ந்தவர்களில் 60 சதவீதம்பேர், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ள நிறு வனங்களில் வேலைக்கு சேர்ந்தவர்கள் ஆவர்.