தமிழகத்தில் இந்தாண்டு மார்ச் 1 முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வுள்ள மாணவ - மாணவியர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கிறது. கவலையும், பயமும் கொள்ளாமல் மன அழுத்தமின்றி தன்னம்பிக்கையுடன் மாணவ - மாணவியர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டுமென மாணவச் செல்வங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. மாணவச் செல்வங்களின் படிப்புக்கு பெற்றோர்கள் அனைத்து வகையிலும் உதவிகளைச் செய்வதோடு, மதிப்பெண் எடுக்க வேண்டுமென்று மாணவர்கள் மீது மன அழுத்தத்தை திணிக்கா மல், அவர்களுக்கு போதிய தன்னம்பிக்கையும், ஊக்கத்தையும் ஊட்டி அவர்கள் தேர்ச்சி பெறு வதற்கு உற்றத் தோழராக திகழ வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.