புதுதில்லி, அக். 7 - மோடி அரசின் ஈவிரக்கமற்ற நடவடிக்கை யால், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் நூறுநாள் வேலைத்திட்டம், 21 மாநிலங்களில் முழுமையாக தடைபடும் நிலையும், 10 கோடிக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயமும் உருவாகியுள்ளது. ஓராண்டில், 100 நாட்களுக்கு வேலையை உத்தரவாதம் செய்ய வேண்டிய இந்த திட்டம், நரேந்திர மோடி அரசு நிதி ஒதுக்கீட்டை வெட்டிச் சுருக்கியதால், 2023-24 நிதியாண்டின் முதல் ஆறு மாதத்திற்கு உள்ளாகவே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இடதுசாரிகளால் உருவான திட்டம்
இடதுசாரிகளின் தொடர் போராட்டத்தின் விளைவாக, காங்கிரஸ் தலைமையிலான ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-1’ ஆட்சிக் காலத்தில், கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம், கிராமப்புற வறுமை ஒழிப்பில் இப்போது வரை முக்கியப் பங்காற்றி வருகிறது. ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்தி விடும் முயற்சியாக, நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து வருகிறது.
வெட்டிக் சுருக்கப்படும் நிதி ஒதுக்கீடு
2022-2023 நிதியாண்டில் ரூ. 89 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ. 73 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி யது. 2023 -2024 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இதையும் குறைத்து, வெறும் ரூ. 60 ஆயிரம் கோடியை மட்டுமே பாஜக அரசு ஒதுக்கியது. இது, முந்தைய ஆண்டு வழங்கப்பட்ட ரூ. 73 ஆயிரம் கோடியை விட 18 சதவிகிதமும் எதிர்பார்க்கப்பட்ட ரூ. 89 ஆயிரம் கோடியை விட 33 சதவிகிதமும் குறைவாகும்.
சம்பளப் பாக்கி மட்டும் ரூ.17 ஆயிரம் கோடி
இந்த 60 ஆயிரம் கோடி ரூபாயும் முழுமை யாக வழங்கப்படவில்லை. 2022-23 நிதி யாண்டில் தொழிலாளர்களுக்கு வைக்கப்பட்ட சம்பளப் பாக்கி மட்டும் ரூ. 17 ஆயிரம் கோடி யாக இருந்த நிலையில், அந்த சம்பள பாக்கி, மீதமுள்ள ரூ. 43 ஆயிரம் கோடியை மட்டும் வைத்து கிராமப்புற மக்களுக்கு முழுமையாக வேலை வாய்ப்பை வழங்கிட இயலாது என சுட்டிக்காட்டிய போதும் அவற்றை காதில் வாங்கிக்கொள்ளாத பாஜக அரசு தற்போது அந்த திட்டத்தை முடங்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
துணைபட்ஜெட் எனும் ஏமாற்று வேலை
நிதிகுறைப்பு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் போதெல்லாம், தேவை ஏற்படும் போது, கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அதன் படி, நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க ரூ. 23 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டுமென ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் செப்டம்பர் 15 அன்று கோரிய நிலை யில், அதற்கு நிதி அமைச்சகம் எந்தப் பதிலும் தெரிவிக்காமல் கள்ள மவுனம் காத்து வரு கிறது. துணை பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியும் போதுமானதாக இருப்பதில்லை. 2021-22 மற்றும் 2022-23க்கு இடையில், இத்திட்டத்திற்கான பட்ஜெட் 25 சதவிகிதம் குறைக்கப்பட்டது, பற்றாக்குறையை சமா ளிக்க கூடுதலாக ரூ. 25 ஆயிரம் கோடி கேட்கப்பட நிலையில் ரூ. 16 ஆயிரம் கோடியை மட்டுமே பாஜக அரசு ஒதுக்கியது.
11 கோடி குடும்பங்கள் பாதிப்பு
முதன்மையான கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டமாக இருக்கும் இத்திட்டத்தின் கீழ் 11.37 கோடி குடும்பங்கள் 2022 டிசம்பர் மாதம் வரை வேலை பெற்றுள்ளதாக ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள் ளது. இவ்வாறு வேலைவாய்ப்பு மூலம் கிரா மப்புற வறுமை ஒழிப்பில் முக்கிய பங்கு செலுத்தக்கூடிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு, நிதி ஒதுக்கீடு செய்ய பாஜக அரசு இழுத்தடிப்பு செய்து வருவதால், இத்திட் டத்தின் செயல்பாடு மிக மோசமான சூழலுக்கு சென்று தற்போது தமிழ்நாடு உள்பட 21 மாநி லங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
30% பேர் -பட்டியல் சாதி- பழங்குடியினர்
நூறுநாள் வேலைத் திட்டத்தில், தமிழ் நாட்டில் மட்டும் 93.35 லட்சம் பேர் பதிவு செய்துள் ளனர் என்றாலும், 65 லட்சம் பேர்களுக்கே வேலை வழங்கப்பட்டு வருகிறது. இவர்களிலும் 86 சதவிகிதம் பேர் பெண்கள், 14 சதவிகிதம் பேர் ஆண்கள், ஒட்டுமொத்த தொழிலாளர் எண்ணிக் கையில் 30 சதவிகிதம் பேர் பட்டியல் - பழங்குடியினர் என்பது குறிப்பிடத்தக்கது.