states

img

எஸ்சி, எஸ்டி, ஒபிசி பிரிவினரின் வேலையைப் பறித்த ஒன்றிய அரசு

புதுதில்லி, டிச.16- ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்க ளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத் தப்பட்டோரின் வேலைவாய்ப்பை மோடி அரசு பறித்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்க ளில் எத்தனை ஆசிரியர் பணியிடங் கள் காலியாக உள்ளன? என மாநி லங்களவையில் எழுப்பப்பட்ட கேள் விக்கு, ஒன்றிய கல்வித்துறை அமைச் சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வ மாக பதில் வழங்கியிருந்தார்.  அதில், “ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் 10 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளதாக அவர் கூறியுள்ளார். “ஒன்றிய அரசின் பல்கலைக்கழ கங்களில் முழுநேர ஆசிரியர் பணிக்கு 6 ஆயிரத்து 535 இடங்கள் காலியாக உள்ளன.

அதேபோல, இந்திய மேலா ண்மைக் கல்வி நிறுவனங்களில் (ஐஐஎம்) 403 ஆசிரியர் பணி இடங்க ளும், இந்திய தொழில்நுட்பக் கழகங்க ளில் (ஐஐடி) 3 ஆயிரத்து 876 ஆசிரி யர் பணியிடங்களும் காலியாக உள் ளன. இதன்மூலம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறு வனங்களில் மொத்தம் 10 ஆயிரத்து 814 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன” என்று அவர் தெரிவித்தி ருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், ஒன்றிய அரசின் முன் னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “ஆண்டு இறுதியில் மோடி அரசின் மற்றொரு பரிசு. மத்திய பல்க லைக்கழகங்கள், ஐடிடி-கள், ஐஐஎம்-களில் மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் 4 ஆயி ரத்து 126 ஆசிரியர் பணியிடங்கள் எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி. பிரிவின ருக்கு ஒதுக்கப்பட்டவை ஆகும். ஆசி ரியர்கள் மூலம் கற்பிப்பதே அவர் களின் முதன்மை நோக்கம் என்று நாங்கள் நினைத்தோம். போதிய ஆசிரியர்கள் இல்லாமல் இந்த நிறுவனங்கள் என்ன செய்கின்றன? என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.