states

பொதுசிவில் சட்டம் தொடர்பான விவகாரத்தில் நாங்கள் தலையிட முகாந்திரம் இல்லை!

புதுதில்லி, ஜன. 10 - பொது சிவில் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக குஜராத், உத்தரகண்ட் மாநில அரசுகள் குழு அமைத்ததற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அனூப் பரண்வால் உள்ளிட்டோா் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த பொதுநல மனுக்களை தலைமை நீதிபதி  டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமா்வு திங்களன்று விசாரித்தது. அப்போது, ‘‘பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவதற்காக மாநில அரசுகள் குழுக்களை அமைத்திருப்பதில் எந்தவிதத் தவறும் காண முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் 162-ஆவது பிரிவானது அதுபோன்ற குழுக்களை அமைக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 7-ஆவது அட்டவணையும் அத்தகைய அதி காரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கி யுள்ளது. அப்படியிருக்கையில் மாநில அரசு களின் நடவடிக்கையை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என எவ்வாறு கூற  முடியும்?” என்று கேள்வி எழுப்பிய நீதி மன்றம், “எனவே, இந்த மனுவை நாங்கள் விசா ரிப்பதற்கு எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை’’

எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியா வில் மக்களிடையே ஒருங்கிணைப்பை வலுப் படுத்தும் நோக்கில் மதம், வகுப்பு, பாலினம்  என எத்தகைய வேறுபாடுமின்றி அனைவருக் கும் பொதுவான சட்ட விதிகளை வகுக்க அர சியலமைப்புச் சட்டத்தின் 44-ஆவது பிரிவு வழி வகுக்கிறது. இதன்மூலம் திருமணம், விவா கரத்து, தத்தெடுத்தல், பரம்பரை சொத்து உள்ளிட்ட விவகாரங்களில் அனைவருக்கும் பொதுவான விதிகளைக் கொண்டுவர முடியும்.  நல்ல நோக்கத்தின் அடிப்படையிலேயே, இந்தப் பிரிவுகள் அரசியலமைப்புச் சட்டத்தின் சேர்க்கப்பட்டு இருந்தன. ஆனால், ஒன்றிய பாஜக அரசு இந்த சட்டப்பிரிவுகளை சிறு பான்மையினர் மீது ஒடுக்குமுறையைத் திணிப் பதற்கான கருவியாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மேலும், பொது சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் மாநில அரசு களுக்கே உள்ளது என்று கூறி, மாநிலங்களின் அளவில் இதனை நடைமுறைக்கு கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. முதற்கட்ட மாக தாங்கள் ஆளும் மாநிலங்களில் இதற்கான குழுக்களை அமைத்துள்ளது.