இடதுசாரி - காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு குற்றச்சாட்டு
அகர்தலா, மார்ச் 12- திரிபுரா சட்டமன்றத் தேர்தல் முடிவுற்ற பின்னர், தேர்தலில் தாங்கள் எதிர்பார்த்தபடி பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், வெறிகொண்டு, எதிர்க்கட்சியினரைக் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மீது வன்முறை வெறியாட்டங் களில் ஈடுபட்டுள்ள ஆர்எஸ்எஸ்/பாஜக கயவர்களைக் கைது செய்து, சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுத்து, தண்டனை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி, இடதுசாரி - காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரிபுரா ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தனர். திரிபுராவில் தேர்தல் முடிவுகள் மார்ச் 2 அன்று அறிவிக்கப்பட்ட பின்னர், மார்ச் 6 வரையிலும் மாநிலம் முழுவதும் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக குண்டர்கள் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி ஊழியர் களையும் ஆதரவாளர்களையும் நேரடி யாகவே தாக்கியிருக்கிறார்கள், அவர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கிறார்கள், வீடுகளுக்குத் தீ வைத்திருக் கிறார்கள் மற்றும் கட்சி அலுவலகங்களை யும் இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கிறார் கள். குறிப்பாக, ஊழியர்களின் வாழ்வாதாரங் களைப் பறித்திடும் விதத்தில் அவர்களின் ரப்பர் தோட்டங்களை எரிப்பது, விவசாயம் செய்துள்ள பயிர்களை நாசம் செய்வது, அவர்களின் இ-ரிக்சாக்களையும், வாகனங் களையும் நாசப்படுத்துவது போன்ற விதத்தில் மிகவும் இழிவான செயலை மேற்கொண்டார்கள்.
இந்தச் சம்பவங்கள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்திடவும் உரிய நட வடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எளமரம் கரீம், பி.ஆர்.நடராஜன், பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, ஏ.ஏ. ரகிம், இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினாய் விஷ்வம் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரஞ்சித் ரஞ்சன், அப்துல் காலிக் ஆகியோரடங்கிய தூதுக்குழுவினர் திரிபுரா ஆளுநரை சனிக்கிழமையன்று சந்தித்து, ஒரு கடிதம் அளித்தனர். அதன் விவரம் வருமாறு: திரிபுராவில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் ஒருதலைப்பட்சமாக மிகவும் பயங்கரமான வன்முறை வெறியாட்டங்கள் ஆளும் பாஜக குண்டர்களால் எதிர்க்கட்சி யினருக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப் பட்டுள்ளதாக பத்திரிகைகளிலும், டிவி மற்றும் சமூக வலைத்தளங்களிலும் செய்தி கள் வெளியானதைக் கேள்விப்பட்டோம். எனவே கீழே கையொப்பமிட்டுள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் பத்தாம் தேதியன்று மாநிலத்தில் உள்ள நிலைமைகளை ஆராய்வதற்காக வந்திருக்கிறோம்.
வெள்ளிக்கிழமையன்று மாலை, நாங்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து மாநி லத்தின் சதார், மோகன்பூர் மற்றும் பிசல்கார் ஆகிய உட்கோட்டங்களுக்குச் சென்று பார்வையிட்டோம். எங்களுடன் திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மற்றும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பிரஜித் சின்கா(சிபிஎம்), மாநில செயலாளரும் புதிய சட்டமன்ற உறுப்பினருமான ஜிதேந்திர சௌத்ரி, புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட சட்டமன்ற உறுப்பினர் கோபால் ராய், நாயன் சர்க்கார். சுதிப் சர்க்கார், ராமுதாஸ், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செய லாளர் டாக்டர் அஜய் குமார் மற்றும் மாநில அளவிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் இந்தக் குழுக்களில் இடம் பெற்றிருந்தார்கள். பி.ஆர். நட ராஜன் (சிபிஎம்), பினாய் விஷ்வம் (சிபிஐ) ஆகியோர் தலைமையிலான குழு பர்ஜாலா, நர்சிங்கார், பமு டியா ஆகிய இடங்களுக்குச் சென் றன. மற்றொரு குழு பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, ஏ.ஏ.ரகிம் (இருவரும் சிபிஎம்), ரஞ்சித் ராஜன் (காங்கிரஸ்) ஆகியோரடங்கிய குழு கல்காலியா, ஹரினாகோலா ஆகிய இடங்க ளுக்குச் சென்றது. எளமரம் கரீம் (சிபிஎம்), அப்துல் காலிக் (காங்கி ரஸ்) ஆகியோர் அடங்கிய குழு பதர் காட், நேகால் சந்திரா நகர் ஆகிய இடங்களுக்குச் சென்றது.
நாட்டில் வேறெங்கும் நடக்காத கொடூர நிகழ்வுகள்
நாங்கள் பார்த்தவையும், பாதிக் கப்பட்ட குடும்பத்தினர்களிடமிருந்து நாங்கள் கேட்டவையும் எங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடி யாத அளவிற்கு எங்களை அதிர்ச் சிக்குள்ளாக்கின. நாட்டில் இது போல் வேறெந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு மிகக் கொடூரமான முறையில் கொடுமைகள் நடந்தி ருக்காது. பாதிக்கப்பட்டவர்கள் அனை வருமே தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மறு கணமே தங்கள்மீது தாக்குதல்கள் மிகவும் கொடூரமான முறையில் மேற் கொள்ளப்பட்டதாக எங்களிடம் கூறி னர். வெற்றியைக் கொண்டாடு கிறோம் என்ற பெயரில், மிகவும் வெறித்தனமான முறையில் எதிர்க் கட்சித் தலைவர்கள், ஊழியர்கள், ஆதரவாளர்களைக் குறிவைத்து வன்முறை வெறியாட்டங்களில் ஈடு பட்டுள்ளார்கள். அவர்கள் எதிர் கொண்ட எதிர்க்கட்சியினர் எவராக இருந்தாலும் மிகவும் மோசமான முறையில் தாக்குதலை மேற் கொண்டுள்ளார்கள்.
உணவின்றி அவதிப்படும் பாதிக்கப்பட்ட மக்கள்
நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் வீடுகள், கடைகள் தீக்கிரை யாக்கப்பட்டிருப்பதையும், ரிக்சாக் கள், இ-ரிக்சாக்கள் சேதப்படுத் தப்பட்டிருப்பதையும், வாகனங்கள் எரிக்கப்பட்டிருப்பதையும் பார்த் தோம். பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, உறைவிடம், மருத்துவ சிகிச்சை இன்றி அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் சென்ற சமயங்களில் போலீசாரின் முன்னிலையிலேயே ஆளும் கட்சியினர் எங்களையே மிரட்டும் தொனியில் ஈடுபட்டார்கள். மிகவும் மோசமான நிகழ்வு, எங்கள் குழு பிசல்காரில் நேஹால் சந்திரா நகர், சந்தைப் பகுதிகளுக்குச் சென்றிருந்த சமயத்தில் கிட்டத்தட்ட எங்கள் குழுவினர் முற்றுகையிடப் பட்டனர். குண்டர்கள் ஜெய் ஸ்ரீராம் என்றும், பாரத் மாதா கி ஜே என்று கத்திக்கொண்டே எங்கள் மீது கற் களையும் செங்கற்களையும் எறிந்த னர். எனினும், வெறிபிடித்த பாஜக குண்டர்களின் பிடியிலிருந்து, மயிரி ழையில் நாங்கள் உயிர் தப்பினோம். எங்கள் குழுவினரின் பல வாக னங்கள் சேதப்படுத்தப்பட்டன. தேர்தல் முடிவுகள் வெளியான தற்குப்பின்னர் இதுவரையிலும் ஆயி ரம் சம்பவங்கள் நடந்துள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள் ளது. இவற்றில் எதிர்க்கட்சி ஊழி யர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள், கடைகள் சூறையாடப் பட்டுள்ளதாகவும், இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டதாகவும், வீடுகளி லிருந்த அனைத்தும் களவாடப்பட்ட தாகவும் எங்களிடம் தெரிவித்தார் கள். உதய்பூர் மற்றும் டெலியமுரா கோட்டங்களில் வயதான, நோய் வாய்ப்பட்டிருந்த மூன்று பேர் கொல்லப்பட்ட காட்டுமிராண்டித் தனமான செய்கையையும் நாங்கள் பார்த்தோம். இரண்டு இடங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடை கள் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டி ருக்கின்றன. மக்களின் வாழ்வாதா ரங்களை முடக்கும் விதத்தில் ரிக்சாக் கள், இ-ரிக்சாக்கள், ஆட்டோக்கள், நான்கு சக்கர வாகனங்கள் நிர் மூலமாக்கப் பட்டிருக்கின்றன. ரப்பர் தோட்டங்கள் எரிக்கப்பட்டி ருக்கின்றன அல்லது வெட்டப்பட்டி ருக்கின்றன. நூற்றுக்கணக்கான கடைகள் சூறையாடப்பட்டிருக் கின்றன. பல இடங்களில் வெற்றி யைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் பாஜக குண்டர்களால், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களி டம் பணம் பறிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் காடுகளுக்குள் விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான வன்முறைகள்-ஒருவரும் கைது இல்லை
இடதுசாரிக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல அலு வலகங்கள் இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டிருக்கின்றன அல்லது தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. ஒரே வார்த்தையில் சொல்வ தென்றால், திரிபுரா மாநிலத்தில் மார்ச் 2க்குப் பின்னர் சட்டம் ஒழுங்கு நிலைமை முற்றிலுமாக சீர்குலைந்தி ருக்கிறது. காவல்துறையினர் கய வர்கள் எவரையும் கைது செய்யத் துணியவில்லை. மாறாக அவர்களு டன் கைகோர்த்துள்ள நிலையைக் காண முடிகிறது. எனவேதான் மாநி லம் முழுவதும் ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடந்துள்ளபோதும் அநேகமாக எவரும் கைது செய் யப்படவில்லை. இதேபோன்று அசம்பாவித சம்பவங்கள் மேலும் ஏற்படக்கூடாது என்பதற்காக, நாங்கள் நாளை பல இடங்களுக்குச் செல்ல இருந்த நிகழ்வுகளை ரத்து செய்து விட்டோம். இத்தகு சூழ்நிலையில்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள், மாநில நிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில், எதையும் கண்டுகொள்ளாது இருப்பதற்குப் பதிலாக, மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் நீங்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
(1) ஒட்டுமொத்த நிர்வாக மும், அரசியல் விரோத மனப் பான்மையை ஒழித்துக்கட்டிவிட்டு, அமைதியை நிலைநாட்ட முன்வர வேண்டும். மாநிலத்தில் பாஜக ஆளும் கட்சியாக இருப்பதால் அதற்கு இதில் மிகவும் பொறுப்பு இருக்கிறது.
(2) அரசியல் வன்முறை வெறி யாட்டங்களில் ஈடுபட்ட கயவர்கள் அனைவரையும் கைது செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு வன்முறையில் ஈடுபட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(3) இ-ரிக்சாக்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாக னங்களை இயக்கிவந்தவர்கள் மீண்டும் அவர்கள் இயங்கி வந்த சாலை மார்க்கங்களில் தங்கள் வாக னங்களை ஓட்டுவதற்கு அனும தித்திட வேண்டும்.
(4) வன்முறை வெறியாட்டங்க ளில் வாழ்வாதாரங்களை இழந்த அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். இவ்வாறு நாடாளுமன்ற தூதுக் குழுவினர் ஆளுநரிடம் கோரியுள்ள னர். (ந.நி.)