states

img

திரிபுரா கனமழை - பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

திரிபுராவில் இடைவிடாத பெய்து வரும் கனமழையால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர்.

திரிபுரா மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதுடன், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகள் இல்லாத அளவில் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்தனர்.

வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு மாவட்டங்களில் உள்ள 450 நிவாரண முகாம்களில் சுமார் 65,500 பேர் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, திரிபுராவுக்கு ரூ.40 கோடி வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.