states

img

திரிபுரா தேர்தல் ‘ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள்’

வரும் 16-ஆம் தேதியன்று  சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள திரிபுராவில் முற்றிலும் அசாதாரண சூழல் நிலவுகிறது. எனினும், பாஜகவின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத ஆட்சிக்கு முடிவுகட்டுவதற்கு மக்கள் ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள். இது பற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யும்,  மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான ஜிதேந்திர சௌத்ரி தேசாபிமானிக்கு அளித்த நேர்காணல் இது: 

இப்போது நடைபெறவுள்ள சட்ட மன்றத் தேர்தல் திரிபுராவின் வர லாற்றில் முக்கியமான தேர்தல் என்று  சிறப்பித்துக் கூறப்படுகிறது. இந்தத்  தேர்தலின் முக்கிய விஷயம் என்ன?

மாநிலத்தில் ஜனநாயகமும் சட்டத்தின்  ஆட்சியும் மறுசீரமைக்கப்பட வேண்டும். ஐந்து  ஆண்டுக்கால பாஜக ஆட்சியில் திரிபுராவில் ஜனநாயகம் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது. எல்லா துறைகளிலும் மக்களின் சுதந்தி ரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய அரசி யல் அமைப்புச் சட்டம் திரிபுராவில் முக்கி யத்துவமில்லாமல் போனது. சதியாளர்களின், வன்முறையாளர்களின் கையில் திரிபுரா அரசு  உள்ளது. சாதாரணமாக அரசியல் கட்சிகள் தங்க ளின் அரசியல் நிலைபாடுகளையும் கொள்கை களையும் பிரச்சாரம் செய்து மக்களிடம் ஆதரவு பெறுவதும், அவர்களுக்கு ஊக்கமூட்டுவ தும்தான் நடக்கும். ஆனால், இங்கே இப்போது மக்கள்தான் அரசியல் கட்சிகளுக்கு ஊக்க மூட்டுகிறார்கள். தற்போதைய சூழலில் பாஜக  எதிர்ப்பு வாக்குகள் பிளவுபட்டுப் போவதைத் தவிர்ப்பதற்கு மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து நிற்கவேண்டுமென்று மக்கள் வேண்டு கிறார்கள். மாநிலத்தில் விரிவான மதச்சார்பற்ற ஒற்று மையும், தொகுதி உடன்பாடும் உருவான தற்குக் காரணம் மக்களின் விருப்பம்தான். அசாதாரணமான விசேஷ நிலை இது. எந்தக்  காரணத்தாலும் பாஜக மீண்டும் திரிபுராவின் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்று மக்கள் விரும்புகிறார்கள்.

கடந்த 2018-ஆம் ஆண்டு தேர்தலில்  பாஜக வாக்குறுதிகளை அள்ளிவீசி யது. வாக்காளர்களில் ஒரு சிறு பிரி வினர் பாஜகவின் வாக்குறுதிகளில் ஏமாற்றப்பட்டனர். அந்த வாக்குறுதி களின் நிலைமை என்ன?

முக்கியமாக, பிரதமர், நிதிஅமைச்சர் உள்  ளிட்டவர்கள் கடந்த தேர்தலில் திரிபுராவில் வாக்குறுதிகளை அள்ளிவீசினர். 25 ஆண்டு கால இடதுமுன்னணி ஆட்சிக்கு எதிராக அவர்  கள் அன்று ஒன்றும் கூறவில்லை. ஆனால், ஒற்றை இன்ஜின் அரசு மாறி இரட்டை இன்ஜின் அரசு வந்தால் திரிபுராவில் பெரும் வளர்ச்சி உண்டாகும் என்று பிரச்சாரம் செய்தனர். மாநி லத்திலும் மத்தியிலும் பாஜக ஆட்சி என்பதாக அவர்களின் பிரச்சார முழக்கம் இருந்தது. 299 வாக்குறுதிகள் கொண்ட குறிக்கோள் ஆவ ணம் ஒன்றை வெளியிட்டனர். இடதுமுன்னணி அரசு கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை ஒரு முன்மாதிரித் திட்ட மாக நடைமுறைப்படுத்தியது. பாஜகவோ இரட்டிப்பு வேலைநாட்கள், இரட்டிப்புச் சம்ப ளம் என்று வாக்குறுதி அளித்தது. இடதுமுன் னணி ஆட்சிக் காலத்தில் ஐந்து ஆண்டுகளில் 40,000 பேர்க்கு அரசு வேலை வழங்கியது. எங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் முதலா வது ஆண்டிலேயே 50,000 பேர்க்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று பாஜக வாக்கு றுதி அளித்தது. ஐந்து ஆண்டுகளில் தனி யார்துறை உள்பட ஏழரை லட்சம் பேர்களுக்கு வேலைகள் உருவாக்குவோம் என்றும் சொன்  னார்கள். 

சமூகநல பென்சன் இருமடங்காக உயர்த்தப்படும் என்றும், மாநில அரசு ஊழி யர்களுக்கு ஒன்றிய அரசின் ஏழாவது சம்பள  கமிஷன் பரிந்துரைக்கு இணையான சம்பளம்  வழங்குவோம் என்றும் பாஜக தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர். அரசு ஊழியர்களின் சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்று பிரச்சாரம் செய்தனர். குழந்தைகள் முதல் வயோதிகர் வரையானவர்களுக்கான வாக்குறுதிகளை வாரிவாரி இறைத்தனர். இவை மட்டுமா...?  இன்னும் உள்ளது. திரிபுரா மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஆதி வாசி சுயாட்சிக் கவுன்சில் ஏற்படுத்தி ‘டிப்ரா  லாண்ட்’ என்ற புதிய மாநிலம் உருவாக்கு வோம் என்றும் ஐபிஎஃப்டி கட்சிக்கு பாஜக  உறுதியளித்தது. பாஜக ஆட்சிக்கு வந்தால்  ஆறு மாதங்களுக்குள் இதை நிறைவேற்று வோம் என்று பிரதம மந்திரி நரேந்திரமோடி ஒரு பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.  ஐந்து ஆண்டுகளில் இந்த வாக்குறுதி களில் ஒன்றைக்கூட திரிபுரா பாஜக அரசு  நிறைவேற்றவில்லை. அதற்குப் பதிலாக மக்க ளுக்குப் பலவிதங்களிலும் துரோகம்தான் இழைத்தது. மக்கள் பாஜகவிலிருந்து  விலகி னர். ஒன்றிய அமைச்சர்கள் தொடர்ந்து திரிபுரா வுக்கு வந்தபோதிலும் விளைவு என்னவோ மிகமோசம்தான்.  எதிராளிகள் அனைவரும் பாஜக வுக்கு எதிராக ஒன்றுபட்டிருக்கி றார்கள் என்றல்லவா பிரதமர் உள் பட கூறுகிறார்கள்? பாஜகவுக்கு எதிராக மக்கள் அனைவரும் அணிவகுக்கிறார்கள். அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுகிற அரசு  நீடிக்கக் கூடாது என்று மக்கள் விரும்புகி றார்கள். மக்களுக்கு எதிரான சக்திக்கு எதிரா கத்தான் மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

2018 இல் பிப்ளப் குமார் தேப் முதல மைச்சராகப் பதவியேற்றபோது, இவர் 25 ஆண்டுகள் வரை பதவியில் நீடிக்கும் முதலமைச்சர் என்று அவரை  பிரதமர் மோடி சிறப்பித்துக் கூறினார்.  ஆனால், நான்கு ஆண்டுகளுக்குள் முதலமைச்சரை ஏன் மாற்றினார் கள்? இதை எப்படிப் பார்ப்பது?

பிப்ளப் குமார் தேப் உறுதிமொழி ஏற்கும்  போது, இவர் வெறும் ஐந்து ஆண்டுகள் முதல மைச்சர் அல்ல; 2043 வரை நீடிக்கும் முதல மைச்சர் என்றுதான் பதவியேற்றார் என்று பிர தமர் கூறினார். தேப் எல்லா துறைகளிலும் தோற்றுவிட்டார். அவரை பதவியிலிருந்து மாற்றியதற்கான காரணத்தை பாஜக இன்று வரை தெரிவிக்கவில்லை. இது உள்படத் தெரிந்து கொள்ள மக்கள் விரும்புகிறார்கள்.  ஒப்பந்தங்களை மாநிலத்திற்கு வெளியே உள்ளவர்களுக்குத்தான் தருகிறார்கள். கமி ஷனைக் கைப்பற்றுவதில் மட்டும்தான் பாஜக வுக்கு அக்கறை. திரிபுராவில் 2018-ஆம் ஆண்டு  பாஜக வெற்றியை கொள்கைக்குக் கிடைத்த  வெற்றி என்று பிரதமர் மோடி வியாக்கியானம் செய்தார். ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள  ஆட்சி வந்ததை உத்தேசித்து மோடி அப்படிச்  சொன்னதாக இருக்கலாம். பாஜக ஆட்சி திரி புராவுக்கு வழங்கியது வன்முறையும் ஊழலும்  மட்டும்தான்.

இந்தத் தேர்தலில் இடதுமுன்னணி யின் எதிர்ப்பார்ப்பு என்ன?

பாசிஸ்ட் குணமுள்ள பாஜக ஆட்சியில்  இடதுமுன்னணி ஏராளமாக அனுபவித்து விட்டது. ஊழியர்கள் தங்கள் வீடுகளைவிட்டு,  ஊரைவிட்டு போகவேண்டி வந்தது. அரசியல் செயல்பாட்டுச் சுதந்திரம் பறிக்கப்பட்டது. இப்  போது அந்த நிலைமை மாறிவிட்டது. பெரும்  பாலான ஊழியர்களும் சொந்த கிராமங்க ளுக்குத் திரும்பி வந்துவிட்டனர். கிட்டத்தட்ட கட்சியின் எல்லா அலுவலகங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை வலுவாகச் செயல்படுகிறது. தேர்தல் நாள் மிக முக்கியமான நாளாகும். எப்பாடு பட்டும் மதச்சார்பற்ற சக்திக்கு வாக்களித்தே தீருவோம் என்கிற நிலைபாட்டில் மக்கள் உறுதி யாக உள்ளனர். இது நல்ல அடையாளமாகும்!

நன்றி: தேசாபிமானி (11.2.2023)
தமிழில்: தி.வரதராசன்