states

மஞ்சள்-இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம், புதிய தோட்டக்கலைக் கல்லூரி துவக்கம்

சென்னை,ஏப்.28- தமிழ்நாட்டில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி, மஞ்சள் ஆராய்ச்சி மையம் மற்றும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை ஏப்ரல் 28 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். இதில்  கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பணியாற்றிவரும் தினக்கூலி பணியாளர்களின் பயன்பாட்டிற்காக கோயம்பேட்டில் ரூ. 2.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகத்தையும், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜீனூரில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கரூர், நாகப்பட்டினம் மாவட்டம் – கீழ்வேளூர் மற்றும் சிவகங்கை மாவட்டம் – செட்டிநாடு ஆகிய இடங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களையும் தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் – பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர் – வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் ஆகியவற்றையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.