சென்னை, மே 4- யமஹா தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் சிஐடியு சங்கம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: யமஹா தொழிற்சாலையில் சிஐடியு யமஹா தொழிலாளர்கள் நடத்திய நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு 03-5- 2023 அன்று ஆலைக்குள் தொழிற்சங்க தேர்வுக்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நடைபெற்றது.இதில் பதிவான வாக்குகள்: IYMts (சிஐடியு) 783 Symts 27 செல்லாதவை 7. இந்த மாபெரும் வெற்றிக்காக யமஹா தொழிலாளர்கள் பொருளாதார இழப்புகள், ஆலைக்குள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு இந்த வெற்றியை அடைந்திருக் கிறார்கள். சிஐடியு என்கிற தொழிற்சங்கத்தை அதன் அச்சு அசலோடு தேர்ந்தெடுத்த யமஹா தொழிலாளர்களுக்கு சிஐடியு மாவட்டக்குழு புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. யமஹா தொழிலாளர்களின் போராட்டத் திற்கான இந்த பயணத்தில் சிஐடியு தமிழ் மாநிலக் குழு மற்றும் தமிழகம் முழுவதும் அனைத்து வகையான போராட்டங்களிலும் தங்களை இணைத்துக் கொண்டு தொழிற்சங்க உரிமைக்கான இந்த வரலாற்று பயணத்தில் வெற்றியடைய பங்கெடுத்த அனைத்து தோழர்களுக்கும் சங்கங்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
எப்போதெல்லாம் யமஹா தொழிலாளர்கள் போராடினார்களோ, அப்போதெல்லாம் அவர்களுக்கு உறுதுணையாக நின்ற ஒரே அரசியல் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழுவிற்கும், யமஹா தொழிலாளர்களுக்காக ஒவ்வொரு முறையும் குரல் கொடுத்து வாதாடிய மார்க்சிஸ்ட் கட்சி யின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சிஐடியு மாவட்டக்குழு சார்பிலும் யமஹா தொழி லாளர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரி வித்துக் கொள்கிறோம். தொழில் அமைதிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் தொழில் நல்லுறவுக்கும் சரியான தீர்வு தொழிலாளர்களின் பெரும்பான்மை தொழிற்சங்க அங்கீகாரம் தான் என்கிற அனு பவத்தை இந்த தேர்தலின் மூலம் இந்தியா யமஹா தொழிலாளர்கள் கொடுத்திருக்கிற மிகச்சிறந்த தீர்வாக நாம் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். இந்த சாதனை இப்போது யமஹாவில் மட்டுமே நடந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்க வெற்றியாகும்.
சிறந்த முடிவுகளை எட்டுவதற்கும் தொடர்ச்சியாக தொழிலாளர் நிர்வாகத்தின் கோரிக்கைகளை தீர்வு காண்பதில் மிகச் சிறந்த பங்களிப்பினை நல்கிய தமிழக தொழி லாளர் துறை கூடுதல் ஆணையருக்கும் காஞ்சி புரம் மாவட்ட தொழிலாளர் துறை துணை ஆணையருக்கும் தொழிலாளர் துறை உயர் தலைமை அதிகாரிகளுக்கும் சிஐடியு பாராட்டு கிறது; நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. நீதிமன்றத்தில் தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்டுவதற்காக இக்காலத்தில் கடுமை யாக போராடிய உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் அவர்களுக் கும் வழக்கறிஞர் சிவக்குமார் பிரதாபன் உள்ளிட்ட அனைத்து நமது வழக்கறிஞர் குழு விற்கும் சிஐடியு மற்றும் யமஹா தொழி லாளர்கள் நெஞ்சார்ந்த நன்றியை, பாராட்டுக் களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பெரும் போராட்டத்தில் கைகோர்த்த அனைவருக்கும் சிஐடியு புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரி விக்கிறது.