states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாஜக எம்பி பிரிஜ் பூஷண்  மீதான பாலியல் புகார் தொடர்பாக தில்லியில் இரண்டாம் கட்டமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மல்யுத்த வீரர்,  வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஜூன் 15 வரை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக  மல் யுத்த வீரர், வீராங்கனை கள் கூட்டாக  அறி வித்துள்ளனர். ஜூன் 15 தேதிக்குள் விசார ணையை முடிக்க வில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடருவோம் என  வீரர் பஜ்ரங் புனியா எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.

தென்கிழக்கு அரபிக்கட லில் உருவாகியுள்ள “பைபர்ஜாய்” புயல் அடுத்த 12 மணி நேரத் தில் “மிகவும் தீவிர மான” சூறாவளி புயலாக  வலுப்பெறும் என்பதால், ஜூன் 12 வரை மும்பை  மற்றும் கொங்கன் பகுதி களில் கனமழை எச்ச ரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

“குஜராத்தின் அமுல் மூலம், தமிழ்நாட்டின் ஆவினை காலி செய்வ தற்கும், அதன் உண்மை யான வேர்களை அறுப்ப தற்கும் பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளது” என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரும் மனுக் கள் மீது 7 நாட்களில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்ற முந்தைய உத்தர வை முறையாக பின்பற்ற வேண்டும்; ஆனால் ஆடல், பாடல் நிகழ்ச்சி க்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் மனுதாரர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என உயர்நீதிமன்ற மது ரைக்கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை யையொட்டி திருச்சியில் 2 நாட்களுக்கு டிரோன் கள் பறக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இருந்து சீட்டுக்கட்டு கணக்கு பகுதி நீக்கப்பட்டுள்ளது. சீட்டுக்கட்டு தொடர் பான விளையாட்டு பாடப்புத்தகத்தில் இடம் பெறுவதற்கு எதிர்ப்பு  எழுந்ததால் நீக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

4ஜி, 5ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனத் திற்கு ரூ.89,047 கோடி  மதிப்பிலான அலைக் கற்றை ஒதுக்கீடு செய்து  ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இனி மேல் பிஎஸ்என்எல் நிறு வனம் 4ஜி, 5ஜி சேவை யை வழங்குவதற்கான நடவடிக்கையை தொட ங்க ஏதுவாக இந்த ஒப்பு தல் வழங்கப்பட்டுள்ள தாக விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.

விதிகளை பின்பற்றாமல் உடற்கூராய்வு செய்த தாக புகாரில் கரூர்  மாணவி தேவிகாவின் உடலை மறு உடற்கூரா ய்வு செய்ய  மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தர விட்டுள்ளது.

உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து விமான நிலையங்களி லும் பணிகள் நடைபெறத் தொடங்கி விட்டன. இத்தகவலைத் தெரிவித்துள்ள அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் சிவில் விமானங்களுக்கான அமைச்சகம், ஒவ்வொரு நாளும் சுமார் 20 வெளிநாட்டுப் போக்குவரத்து விமானங்கள் தங்கள் சேவையை மேற்கொள்கின்றன என்று கூறியிருக்கிறது. உஸ்பெகிஸ்தானுக்கு உயர்கல்வி பெறுவதற்கான 30 மாணவர்கள் விமானம் மூலமாக அனுப்பப்பட்டுள்ளனர்.

கச்சா எண்ணெய் உற்பத்தியை மேலும் குறைக்கப் போவதாக சவூதி அரேபியா அறிவித்திருக்கிறது. வரும் ஜூலை மாதத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் 10 லட்சம் கச்சா எண்ணெய் பீப்பாய்கள் உற்பத்தி குறைக்கப்பட்டு விடும். 2024 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கான உற்பத்தியை 4 கோடியே 40 லட்சம் பீப்பாய்களாகக் குறைத்து விடுவது என்று பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பும்(ஓபெக்), அந்நாடுகளில் சில கூட்டாளி நாடுகளும் முடிவெடுத்திருக்கின்றன.

தனது கட்சியை அழிக்க மிகவும் முனைப்புடன் பாகிஸ்தான் ராணுவம் செயல்பட்டு வருவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியிருக்கிறார். தன் மீதான குற்றச்சாட்டுகளையும் ராணுவ நீதிமன்றத்தின் மூலமாக விசாரித்து, சிறையில் அடைக்க சட்டவிரோத முயற்சிகள் நடக்கின்றன என்று கூறியுள்ள இம்ரான் கான், இத்தகைய ஏற்பாடுகளை ரகசியமாக இல்லாமல், வெளிப்படையாகவே செய்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்.