5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை,ஜூலை 4- தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செவ்வாய்க் கிழமை (ஜூலை 5) முதல் ஜூலை 8ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்க ளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
எச்சரிக்கை
ஜூலை 6ஆம் தேதி வரைக்கும் குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழ்நாடு - ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி களில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு பகுதி, கர்நாடகா - கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிக ளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டிருக் கிறது.
புதிய உச்சத்தில் காற்றாலை மின் உற்பத்தி
சென்னை, ஜூலை 4- தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருக்கும். இந்த காலகட்டத்தில் காற்றாலைகள் மூலம் அதிக அளவு மின்சாரம் உற்பத்தியாகும். ஆனால் இந்த ஆண்டு முன் கூட்டியே சீசன் தொடங்கியது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி காற்றாலைகள் மூலம் 5,535 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. இது தான் இதுவரை காற்றாலைகள் மூலம் கிடைத்த உச்சபட்ச மின்சாரமாக இருந்தது. 2 முறையாக காற்றாலை மின் உற்பத்தி புதிய உச்சத்தை அடைந்துள் ளது. இதன்படி, 5,689 மெகா வாட் மின்சாரம் கிடைந்துள்ளது. இது கடந்த வாரம் கிடைத்த மினசாரத்தை விட 1,702 மெகா வாட் அதிகம் ஆகும். வரும் நாட்களில் இந்த அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி, ஜூலை 4- குடிநீரில் கழிவுநீர் கலந்து இருப்பதால் காரைக்கால் பகுதியில் உள்ள மக்களுக்கு கடந்த இரண்டு தினங்களாக காலரா, வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி சுகாதாரத் துறையின் சார்பில் காரைக்கால் மாவட்டத்தில் சுகாதார அவசர நிலை பிர கடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை யொட்டி காரைக்கால் மாவட்ட நிர்வாக மும் பொது மக்களை காய்ச்சிய தண்ணீரை அருந்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. மேலும் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜூலை 4 ஆம் தேதி முதல் 3 நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற் கான உத்தரவை பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகௌவுடு வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வளமான எதிர்காலம் உள்ளது ஜி ஜின்பிங் உறுதி
ஹாங்காங், ஜூலை 4- ஒரு நாடு, இரண்டு அமை ப்புகள் என்ற கொள்கையை உறுதியாக நடைமுறைப் படுத்துவதன் மூலமாக ஹாங்காங் அபாரமான வளர்ச்சியை எட்டும் என்று சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார். பிரிட்டனின் ஆக்கிரமிப்பி லிருந்து விடுவிக்கப்பட்டு, தாய்நாடான சீனாவுடன் ஹாங்காங் இணைந்து 25 ஆண்டுகள் நிறைவுபெற்ற தைக் கொண்டாடும் நிகழ்வுக் காக ஜி ஜின்பிங் ஹாங்காங் சென்றுள்ளார். அங்கு கொண்டாட்ட நிகழ்வொன் றில் பேசுகையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட் டார். மேலும் பேசிய அவர், “சீனாவோடு இணைந்து அற்புதமான புத்துயிர் பெற்று ஹாங்காங் திகழப்போகிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தா லும் எப்போதுமே தாய்நாட் டோடு இணைந்துதான் ஹாங்காங் இருந்திருக் கிறது. 1997 ஆம் ஆண்டில் மீண்டும் தாய்நாட்டுடன் இணைந்ததில் இருந்து புதிய அத்தியாயம் தொடங்கி யது. ஒரு நாடு, இரண்டு அமைப்புகள் என்ற கொள்கையும் பெரும் வெற்றியைக் கண்டுள்ளது” என்று குறிப்பிட்டார். “வெற்றிகரமாக இந்தக் கொள்கை நடைமுறைப் படுத்தப்படுவதால் அத்த கைய நல்ல கொள்கையை மாற்ற வேண்டிய அவ சியம் இல்லை. குழப்பங் களில்இருந்து விடுபட்டு, ஒழுங்கை நோக்கி ஹாங் காங் நகர்ந்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகள் மிகவும் முக்கியமானவையாக இருக் கும். பாய்ச்சல் வேகத்திலான அடுத்த கட்ட வளர்ச்சி ஏற்படும் “ என்று ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.
ஒற்றுமை வளர்கிறது
டமாஸ்கஸ், ஜூலை 4- ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் அப் தொல்லாஹின் சிரியாவுக்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். சிரியாவின் வடபகுதியில் துருக்கிப் படைகள் நுழைந்து நடத்திய தாக்குதலுக்கு கண்ட னம் தெரிவித்துள்ள அவர், “ஈரான் மற்றும் சிரியாவிற்கு இடையிலான பரஸ்பர ஆலோ சனைகள் அதிகரிக்க வேண்டும் என்பதை சிரியாவில் உள்ள நிலைமை காட்டுகிறது. ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்களின் பின்னணி யில் இதைப் பார்க்கவேண்டும்” என்று குறிப்பிட்டார். நான்கா வது முறையாக சிரியத் தலை நகர் டமாஸ்கசுக்கு அப் தொல்லாஹின் பயணம் மேற் கொண்டிருக்கிறார். இருதரப்பு ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்து ழைப்பு ஆகியவை குறித்து சிரிய உயர்மட்ட அதிகாரி களோடு அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.