states

சிறுவாணி அணை விவகாரம் கேரள அரசுடன் பேசுவோம்

சென்னை, ஏப்.21- சிறுவாணி அணை விவகாரத்தில்  தமிழ்நாடு-கேரளா மாநில அதிகாரி களுடன் கூட்டு கள ஆய்வு மேற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஏப்.21)  நேர மில்லா நேரத்தில் எதிர்க்கட்சி  கொறடா எஸ்.பி. வேலுமணி, “சிறுவாணி அணையின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டும்  பணி 90 விழுக்காடு நிறைவடைந் துள்ளதாக செய்தி வந்துள்ளதாகவும், அரசு கவனத்தில் கொண்டு நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த நீர்வளத் துறை அமைச்சரும் அவை முன்ன வருமான துரைமுருகன், “தடுப் பணை கட்டுவதாக செய்தி வந்த வுடன் அதிகாரிகளை அனுப்பி யுள்ளதாகவும், அணை கட்டுவது உண்மையானால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இது  குடிநீர் ஆதார பிரச்சனை என்றும், சிறுவாணிக்கு வரும் தண்ணீர் அணை  கட்டினால் வராது எனவும், அணை கட்டப்பட்டால் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சிறுவாணி தான் கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நீர்வளத் துறை அமைச்சர், “இந்த செய்தி தற் போதுதான் எங்களுக்கு வந்திருக்கி றது. கேரளா அரசு 70 மில்லியன் வரை நீரை தேக்கும் அளவு அணை கட்டி  வருவது குறித்து அதிகாரிகள் ஆய்வு  செய்துள்ளனர் என்றும் தமிழ்நாடு கேரளா மாநில அதிகாரிகளுடன் கூட்டு கள ஆய்வு செய்து நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.