states

அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க சபதமேற்போம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாவட்டக் குழு உறுப்பி னர் வில்லாபுரம் வார்டு உறுப்பினர் தோழர் லீலாவதி அவர்கள் 1997 ஏப்ரல் 23 அன்று சமூக விரோதி களால் பட்டப் பகலில் நடு ரோட்டில் வெட்டி சாய்க்கப்பட்ட நாள் இன்று. ஒரு மனிதன் நல்லவனா? கெட்டவனா? என்பது அவரது இறப்பில் தெரியும் என்பார்கள். இவரது மரணம் இந்திய நாடு முழுவதும் பேசப்பட்டது. ஏப்ரல் 23 அன்று தமிழ்நாடு முழுவதும் போராட்ட களமாக மாறியது. மதுரை மாநகர் முழுவதும் மக்களின் அழுகுரல் தான் கேட்டது. தோழர் லீலாவதி தன் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடிய ஒரே காரணத்தால் கொலை செய்யப்பட்டார்.  அந்த படுகொலையை கண்டித்து நாடே கிளர்தெழுந்தது.   லீலாவதி சாதாரண நெசவு தொழிலை நம்பி வாழ்க்கையை நடத்திய கூலித் தொழிலாளி ஆவார். நாள்தோறும் நெசவு செய்து வரும் கூலியில் தான் அவர்களது வாழ்க்கை ஓடியது. அந்த சூழ்நிலையிலும் தன் குடும்ப நிலையை பெரிதாக கருதாமல் மக்கள் அன்றாடம் சந்திக்கும் ரேசன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் அரிசி பருப்பு மண்ணெண்னெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுவதை தட்டிக் கேட்டார். லாரி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த போராடினார்.  வியா பாரிகளிடம் மாமுல் வாங்கும் கும்பலை எதிர்த்து தைரியமாக கேள்வி கேட்டார்.

இதனால் எப்போதும் மக்களோடு களப்பணியில் இருந்தார். இதனால் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் சார்பில் மதுரை மாநகராட்சி தேர்தலில் வில்லாபுரம் 59வது வார்டு உறுப்பினராக வெற்றிபெற்றார்.  ரேஷன் கடையில் பொருட்கள் கடத்தப்படுவது நிறுத்தப்படும். லாரி மூலம் குடிநீர் காசுக்கு விற்பதை நிறுத்த குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படும், வியாபாரிகளிடம் மாமுல் வசூல் செய்வது தடுக்கப் படும் என  தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்ற பாடுபட்டார். கவுன்சிலரான பிறகும் லீலாவதி குடும்பம் எப்போதும்போல் வறுமையில் தான் உழன்றது. இது மக்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியது. என்னச் சொல்லி ஒட்டு கேட்டாரோ அந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத சமூக விரோதி கள் திட்டமிட்டு லீலாவதியை வெட்டி சாய்த்தனர். ‘எப்போதும் போராளிகள் புதைக்கப்படுவது இல்லை, விதைக்கப்படுகிறார்கள்’ என்பதை மறந்துவிடக் கூடாது. இன்றும் நாடு முழுவதும் பல்வேறு பொறுப்புகளில் பெண்கள் ஆல மர விழுதுகள் போல் பரவி நிற்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை சமூக விரோதிகளுக்கு காவல்துறைகளுக்கோ அஞ்சுவது இல்லை. 

வஞ்சம் ஊழல் பொது வாழ்க்கையில் ஒழுங்கீனம் என அவப்பெயர் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு இன்று 21 நகராட்சியில் 1374 வார்டு, நகராட்சியில் 142 ல் 3843 வார்டு, பேரூராட்சியில் 487 - 7621 வார்டு இதில் வார்டுகளில் 6419 பெண் வார்டு உறுப்பினர்கள், தலைவர்கள், மேயர் என 325 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது, மகிழ்ச்சியானது.  பெண்கள் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் அவர்களை அவர்களது கணவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை. எனவே மக்க ளால் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பு கள் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் பெண்கள் சுதந்திரமாக செயல்பட லீலாவதி நினைவு நாளில் சபத மேற்போம்.

கே.வனஜகுமாரி
சிபிஎம் தென்சென்னை மாவட்ட செயற்குழு