states

தீக்கதிர் விரைவு செய்திகள்

எகிப்தில் பிரதமர் மோடிக்கு ‘ஆர்டர் ஆப் தி நைல்’ விருது

அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து, எகிப்து நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடியை, கெய்ரோ விமான நிலையத்தில், அந்நாட்டு பிரதமர் முஸ்தபா  மத்தவுலி நேரில் வரவேற்றார். அதைத்தொடர்ந்து, ஹோட்டல் ஒன்றில் இந்திய வம்சாவளியினர் வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிய மோடி, 11-ஆம் நூற்றாண்டை சேர்ந்த அல்-ஹகீம் மசூதியை பார்வையிட்டார். பின்னர், முதலாம் உலக போரில் எகிப்துக்காக போரிட்டு, உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்காக அமைக்கப்பட்ட ஹீலியோபோலிஸ் போர்  கல்லறைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர் எகிப்து அதிபர் சிசியை நேரில்  சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப்  தி நைல்’ விருதை வழங்கி, அதிபர் சிசி கவுரவித்தார்.

ஒரு முஸ்லிம் அமைச்சர், எம்.பி. கூட இல்லாதது பாகுபாடில்லையா?

“அமெரிக்காவில் பிரதமர் மோடி முஸ்லிம்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் இல்லை என்று  கூறினார். ஆனால் அவர்கள் மணிப்பூரில் 300 தேவாலயங்களை எரித்தனர். அது  என்ன? குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தினர். அது பாகுபாடு இல்லையா?. மவுலானா  ஆசாத் பெல்லோஷிப்பை அவா்கள் நிறுத்தினர், அதுவும் பாகுபாடுதானே மோடி ஜி. பசு  குண்டர்கள் கண்மூடித்தனமாக மக்களை கொல்கிறார்கள், அதுவும் பாகுபாடுதான். அனை வரும் ஒன்று, அனைவருக்குமான வளர்ச்சி என்பது நல்ல வாசகம். ஆனால், மோடியின் அமைச்ச ரவையில் முஸ்லிம் அமைச்சரோ, எம்.பி.யோ இல்லை என்பதுதான் உண்மை” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.

பாசிச சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையாக இருக்க தீர்மானித்துள்ளோம்!

“பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரையிலான தலைவர்கள் கலந்து கொண்டனர். பாசிச சக்திகளுக்கு எதிராக நாங்கள் ஒற்றுமையாக இருக்க முடிவு செய்துள்ளோம். மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப நாங்கள்  ஒன்றுபட்டுள்ளோம். இது மக்களின் தேர்தல். யாரும் வருத்தப்படவில்லை. சந்திப்பு பயனுள்ள தாக இருந்தது” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் துணை முதல்வரு மான தேஜஸ்வி கூறியுள்ளார்.

அமலாக்கத்துறையை ஏவிவிடும் பாஜகவினர் கோழைகள்!

சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனும், முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் எம்.பி. ஆகியோருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. இதற்கு ஆதித்ய தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். “எனக்கு நெருக்கமானவர்களுக்கு எதிராக நட வடிக்கை எடுப்பதற்கு முக்கியமான காரணம், மும்பை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழலுக்கு எதிராக ஜூலை 1-ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டதுதான். தற்போது ஆட்சியில் உள்ள அரசு மிகவும் பயந்து மத்திய விசாரணை அமைப்புகளை ஏவி விட்டு கோழைகளை போல சண்டை யிடுகின்றனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் குறித்து பாஜக விமர்சனம்: ஆர்ஜேடி பதிலடி

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வியுடன், எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்கும் இடத்துக்கு காரில் சென்றபோது சீட் பெல்ட் அணியாமல் போக்குவரத்து விதி களை மீறியதாக பாஜகவினர் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு ராஷ்ட்ரிய ஜனதாதளம் எம்எல்ஏ சக்தி சிங் யாதவ் பதிலளித்துள்ளார், அதில், “ஸ்டாலின் புல்லட் புரூப் காரில் பயணம் செய்தார். அதில் உள்ள சீட் பெல்ட் சாதாரண கார்களை விட வித்தியாசமான இடத்தில் உள்ளது. பாஜக தலை வருக்கு அதன் இடம் குறித்த அறிவு இல்லை. தமிழக முதல்வர் கண்ணியமானவர், அனைத்து விதிகளையும் பின்பற்றுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மணிப்பூரில் அமைச்சரின் வீடு, பாஜக அலுவலகத்துக்கு தீ

மணிப்பூரில் நடைபெறும் வன்முறைகளுக்கு பாஜக-வின் தூண்டுதலே காரணம் என்ப தால், குக்கி - மெய்டெய் ஆகிய இரண்டு பிரிவினருமே அக்கட்சியின் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வீடுகள், பாஜக அலுவலகங்களுக்கு தீயிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், பொது சுகாதார பொறியியல் துறை, நுகர்வோர் மற்றும் உணவு விவகாரத் துறை அமைச்சராக இருக்கும் சுசிந்த்ரோவின் (மெய்டெய் சமூகத்தை சேர்ந்தவர்) கிழக்கு இம்பால் வீட்டை ஒரு கும்பல்  தீயிட்டு கொளுத்தியுள்ளது. இதே போல அங்குள்ள பாஜக அலுவலகத்துக்கும் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

அனுமனின் அனுகிரகம் எதிர்க்கட்சிகளுக்கே கிடைத்துள்ளது: லாலு

“இந்து-முஸ்லிம் என்ற கோஷத்தை முன்வைத்து, அனுமான்-ஜியின் பெயரைக் கூறிக்கொண்டு பாஜக தேர்தலில் இறங்குகிறது. கர்நாடகாவில், அனுமனை வைத்து அரசியல் செய்யப் பார்த்தார்கள். ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் அனு மனின் அனுகிரகமும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. நாட்டின் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே  பாஜக இயங்கிக் கொண்டிருக்கிறது. 2000 நோட்டு ஏன் தடை செய்யப்பட்டது என்று இன்றுவரை தெரியவில்லை” என்று நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் பேசியுள்ளார்.

உண்மையில் பாஜகவை ஆதரிப்பது ஆம் ஆத்மியா, காங்கிரசா?

“2019, ஆகஸ்ட் 5 அன்று அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்ட டுவீட்டை இணைத்  துள்ளேன். இதனைப் பார்த்த பிறகாவது பாஜக-வுக்கு ஆதரவளிப்பது யார் என்ற சந்தேகம் இன்னமும் இருக்கிறதா? 542 மக்களவை உறுப்பினர்களில் 1 உறுப்பினரை மட்டுமே கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவை கோருகிறது. ஒரு எம்.பி.யை வைத்திருக்கும் ஆம் ஆத்மி தலைவர் காங்கிரசுக்கு தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சிக்கி றார். இப்படியா ஒருவர் ஆதரவு கேட்பது? சிறைசெல்வதைத் தவிர்க்கவே கெஜ்ரிவால் இதை யெல்லாம் செய்கிறார் என்பது நாட்டு மக்களுக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது” என்று காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.

இன்று வெளியாகிறது பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல்

சென்னை,ஜூன் 25- பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் திங்களன்று (ஜூன் 26 ) தேதி வெளியாகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி கள் இயங்கி வருகின்றன. இவற்றில் இள நிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந் தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வரு கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்  446 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் 1.5 லட்சம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் திங்களன்று (ஜூன் 26) வெளியாக உள்ளது. மாணவர்கள், தரவரிசைப் பட்டி யலை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம். தர வரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜூலை 2 இல் கலந்தாய்வு தொடங்குகிறது. 

செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம்

சென்னை,ஜூன் 25- தனியார் மருத்துவமனையில்  அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி  கடந்த இரண்டு நாட்களாக ஐசியூவில் இருந்தார். செந்தில் பாலாஜிக்கு சுவாச கருவி பொறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. காவேரி மருத்துவமனையில் இதய சிகிச்சைக்காக 7 வது தளத்திலுள்ள இதயவியல் சிறப்பு சிகிச்சை பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வந்தார்.  7வது தளத்தில் இருந்து அவர் தற்போது 4 வது தளத்திற்கு மாற்றப்பட்டார். 4 வது தளத்தில் அறை எண் 435 க்கு மாற்றம் செய்யப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  சுவாச கருவி அகற்றப்பட்டு இயற்கை யாக சுவாசித்து வருவதாகவும், செந்தில் பாலாஜி நலமுடன் இருப்ப தாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.