states

நாங்களும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஒன்றல்ல: தொல்.திருமாவளவன்

சென்னை, செப்.30- சென்னை அசோக்நகரில் விசிக  தலைவர் திருமாவளவன் செய்தி யாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தமிழகத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மனித  சங்கிலிப் போராட்டத்திற்கு ஆதரவு  தெரிவித்துள்ள நிலையில், ஆர்எஸ்எஸ்  அணிவகுப்பிற்கு தடை விதித்திருப் பதை காரணம்காட்டி மனித சங்கிலிப் போராட்டத்துக்கும் அனுமதி மறுத் திருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை, சரியில்லை” என்றார். நாங்களும் ஆர்எஸ்எஸ் இயக்க மும் ஒன்றல்ல. நாங்கள் தேர்தலில் பங்கேற்கின்ற ஜனநாயகப்பூர்வமான அரசியல் கட்சிகள். ஆர்எஸ்எஸ் அடிப்படைவாதம் பேசுகிற, வெறுப்பு அரசியலை விதைக்கிற மதவெறி பாசிச அமைப்பு. எனவே அதையும் இதை யும் முடிச்சுப்போட வேண்டாம் என்றும்  திருமா கூறினார். 

தீர்ப்பு ஒத்திவைப்பு

அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனு மதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனை களை விதித்து சென்னை உயர் நீதி மன்றம் கடந்த 22 ஆம் தேதி உத்தரவிட்டி ருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தலைவர் திருமாவள வன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு வெள்ளியன்று(செப்.30) விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மத நல்லிணக்கம், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை சம்பந்தப் பட்டுள்ளதால் மறு ஆய்வு கோர உரிமை உள்ளதாக வாதிட்டார். மேலும், “பேரணிக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சனை. அதை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டிய லிட்டிருக்க வேண்டும். மாறாக, குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப் பட்டுள்ளதால் விசாரணைக்கு உகந்த தல்ல எனக் கூறி அந்த வழக்கில் பிறப் பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய  வேண்டும். இந்த வாதங்களைக் கேட்ட நீதி பதி, திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக் காக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.