states

சண்டைக் காட்சியில் எச்சரிக்கை வாசகம்: வெளியிடகோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை,ஜூன் 8- சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகிருஷ்ணன் என்ப வர் தாக்கல்செய்த மனுவில், திரைப்பட காட்சிகள் மாணவர்களை வன்மு றைக்கு அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு முன் விசார ணைக்கு வந்த போது, திரைப்பட காட்சி களை பார்த்து தான் பள்ளி மாணவர்கள் தங்கள் புத்தக பைகளில் கத்தி போன்ற ஆயுதங்களுடன் வருவதாக மனுதாரர் தெரிவித்தார்.இதற்கு என்ன ஆதாரம் உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பொது நல வழக்கு தொடரக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளதால், இந்த வழக்கை அபராதத் துடன் தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரித்தனர். இதையடுத்து மனு தாரர் மனுவை வாபஸ்பெற்றார். இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.