states

விருதுநகர் சந்தை : துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து விலை உயர்வு

விருதுநகர், ஆக.20-

       விருதுநகர் சந்தையில் துவரை, பாசிப் பருப்பு மற்றும் உளுந்து விலை தொடர்ந்து  உயர்ந்து வருகிறது.

      இதனால், சாமானியர் களின் பட்ஜெட்டில் பெரும் பள்ளம் விழும் நிலை  ஏற்பட்டுள்ளது.   விருதுநகர் சந்தையில் வாரந் தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு :

      துவரம் பருப்பு100 கிலோ  புதுஸ் லயன் வகையானது கடந்த வாரம் ரூ.14ஆயிரம் என இருந்தது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.800 வரை திடீரென உயர்ந்தது. இதன் காரணமாக குவிண்டால் ஒன்று ரூ.14,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     பாசிப் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,100க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் திடீரென மூட்டை ஒன்றுக்கு ரூ.100 உயர்வு ஏற்பட்டு, தற்போது குவிண்டால் ரூ.10,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     உளுந்து நாடு வகையானது 100 கிலோ கடந்த வாரம் வரை ரூ.8,400க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் மூடை ஒன்றுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. எனவே, 100 கிலோ உளுந்து ரூ.8,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல் உளுந்து லயன் 100 கிலோ கடந்த வாரம் வரை ரூ.8,800க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.600 வரை உயர்ந்துள்ளதால் ரூ.9400க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாசிப்பயறு ( இந்தியா) லையன் மீடியம் வகையானது 100 கிலோ மூடை கடந்த வாரம் ரூ.12 ஆயிரம் என விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.100 உயர்ந்து, குவிண்டால் ரூ.12,100க்கு விற்பனையாகிறது.

    மசூர் பருப்பு உடைத்தது 100 கிலோ கடந்த வாரம் ரூ.11,100 என்ற விலைக்கு விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 உயர்ந்துள்ளதால் ரூ.11,200 க்கு விற்கப்படுகிறது.

     பருப்பு வகைகளின் விலை திடீரென ஒரே வாரத்தில் உயர்ந்துள்ளதால் சாமானியர்களின் பட்ஜெட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள் ளது. இதனால், பொது மக்கள் தாங்கள், அன்றாடம் வாங்கிப் பயன்படுத்தும் பருப்பின் அளவை குறைக்கத் துவங்கியுள்ளனர். பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.