கடலூர்,டிச.25- கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியாகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி நீர் மூலம் காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப் பகுதிகளில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சென்னை குடிநீருக்கு முக்கிய ஆதாரமாகவும் வீராணம் ஏரியுள்ளது. இந்த ஏரிக்கு மேட்டூர் தண்ணீர் கீழணையிலிருந்து வடவாறு வழி யாக கொண்டு வரப்பட்டு நிரப்பப் படுகிறது. சனிக்கிழமையன்று (டிச.24) ஏரி, தனது முழு கொள்ள ளவான 47.50 அடியை எட்டியது. தற்போது, கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் அனுப்பி வருகின்ற னர். சென்னைக்கு விநாடிக்கு 65 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப் பட்டு வருகிறது. விவசாயத்துக்காக பாசன வாய்க்கால்களில் விநாடிக்கு 330 கனஅடி தண்ணீர் அனுப்பப் படுகிறது. வீராணம் ஏரி நடப்பாண்டில் 6-வது முறையாக நிரம்பியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏரியின் நீர் மட்டம் அவ்வபோது முழு மையடைவதால், ஏரியைச் சுற்றி யுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் போதுமான சீரான நிலை யில் இருந்து வருகிறது. ஏரியின் கரையை சிதம்பரம் நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர்.