states

img

தென்னக ரயில்வே உதவி ஓட்டுநர் காத்திருப்பு பட்டியலில் இருந்தவர்களுக்கு பணி வழங்க ஆணை

வடகிழக்கு ரயில்வே கோரக்பூர் ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு எழுதியவர்களை தென்னக ரயில்வேயில் நியமிக்கமாட்டோம் என்று உறுதியளித்தனர். 

சென்னை, ஜூன் 25- தென்னக ரயில்வே உதவி ஓட்டுநர் காத்தி ருப்பு பட்டியலில் இருந்தவர்களுக்கு பணி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது வாலிபர் சங்கத்தின் தொடர் போராட் டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் இந்த  அறிவிப்பினை வரவேற்பதாகவும் இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செய லாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு: இந்திய ரயில்வே துறையில் கடந்த  2021 ஆம் ஆண்டு உதவி ரயில் ஓட்டுநர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப் பட்டு பணிநியமனம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணி நியமனத்தின்போது சென்னை மற்றும் திருவனந்தபுரம் ரயில்வே பணி யாளர் தேர்வாணையத்தில் தேர்வு எழுதி வெற்றிபெற்றவர்களுக்கு தென்னக ரயில் வேயில் பணிநியமனம் செய்யவேண்டும். ஆனால், விதிகளுக்கு மாறாக இவர்கள்  காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட னர். அதே நேரம், வடகிழக்கு ரயில்வே கோரக்  பூர் ரயில்வே பணியாளர் தேர்வாணையத் தில் தேர்வு எழுதிய 53 நபர்களை தென்னக ரயில்வே உதவி ஓட்டுநர் பணியில் நியமிப்ப தற்கான நடவடிக்கைகளை இந்திய ரயில்வே துறை மேற்கொண்டது.

கோரக்பூர் ரயில்வே பணியாளர் தேர்வா ணையத்தில் தேர்வு எழுதியவர்களை தென்  னக ரயில்வேயில் நியமிக்கக் கூடாது என்றும் அந்த பணியிடங்களில் சென்னை மற்றும் திரு வனந்தபுரம் ரயில்வே பணியாளர் தேர்வா ணையத்தில் தேர்வு எழுதி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்க வேண்டும் என்றும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் கோரிக்கை விடுத்தது. இக்கோரிக் கையை வலியுறுத்தி 30-09-2021 அன்று சென்னையில் உள்ள தென்னக ரயில்வே தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்து  அறிவித்தோம். முற்றுகைப் போராட்டத் திற்காக வாலிபர் சங்கத்தினர் திரண்டபோது  காவல்துறை சார்பில் தென்னக ரயில்வே அதி காரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வடகிழக்கு ரயில்வே கோரக்பூர் ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு எழுதியவர்களை தென்னக ரயில்வே யில் நியமிக்கமாட்டோம் என்று உறுதியளித்த னர். மேலும், அந்த உதவி ஓட்டுநர் பணி யிடங்களில் சென்னை மற்றும் திருவனந்த புரம் ரயில்வே பணியாளர் தேர்வாணை யத்தில் தேர்வு எழுதி காத்திருப்போர் பட்டிய லில் உள்ளவர்களை நியமிக்க பரிந்துரைக்கி றோம் என வாக்குறுதி அளித்தனர்.  மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனும் இப்பிரச்சனை குறித்து  ரயில்வே அமைச்சருக்கும் அதிகாரிகளுக் கும் கடிதம் எழுதினார். 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் தொடர் போராட்டத்தின் காரணமாக, ரயில் உதவி ஓட்டுநர் பணியிடங்களில் சென்னை மற்றும் திருவனந்தபுரம் ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு எழுதி காத்திருப்போர் பட்டியலில் இருந்த 22 பேரை தேர்வு செய்த பட்டியலை தென்  னக ரயில்வே 25.01.2022 அன்று வெளி யிட்டது. தென்னக ரயில்வேயின் இந்த அறி விப்பை வரவேற்றதோடு காத்திருப்போர் பட்டியலில் உள்ள மீதமுள்ளவர்களுக்கும் உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என தென்னக ரயில்வேயின் பொது மேலாள ருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பாக 28.01.2022 அன்று கடிதம் அனுப்பினோம். இந்நிலையில் ஜூன் 24 அன்று ரயில்வே உதவி ஓட்டுனர் பணியிடங்களில் தென்னக ரயில்வேயில் காத்திருப்பு பட்டியலில் உள்ள  39 பேருக்கும் மறு மருத்துவ பரிசோதனை  செய்து பணி வழங்க ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. தென்னக ரயில்வேயின் இந்த  அறிவிப்பினை இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. வாலி பர் சங்கத்தின் தொடர் போராட்டத்திற்கு உறு துணையாக இருந்த சிபிஎம் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்  ளிட்டோருக்கு வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பாக பாராட்டுக்களை தெரி வித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.