states

வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி அடுத்தமாதம் தொடக்கம்

சென்னை, ஜூன் 27- “தமிழகத்தைப் பொறுத்தவரை, 2024 நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு போதுமான  அளவுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் உள்ளன” என்று  தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் சென்னை யில் செவ்வாயன்று செய்தியாளர்க ளிடம் கூறுகையில், தேர்தலுக்கு முன்பாக, அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களும் சரியாக இருக்க வேண்டும். அதில்  ஏதாவது கோளாறுகள் இருப்பின்,  அதை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான பணிகள் வரும் ஜூலை 4ம் தேதியில் இருந்து தமிழ கத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பொதுத் தேர்தலின்  போதும், இதுபோல ஒரு வருடத்துக்கு முன்பே இந்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். இந்த பராமரிப்பு மற்றும் சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்த பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் அந்தந்த மாவட்டங்களில் பாதுகாப்பான முறையில் வைக்கப் படும். தமிழகத்தைப் பொருத்த வரை, 2024 நாடாளுமன்றத் தேர் தலை நடத்துவதற்கு போதுமான அளவுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் உள்ளன. ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1, இந்த தேதிகளுக்குள் 18 வயது  பூர்த்தியடைந்தவர்கள், முன்கூட்டியே கூட வாக்காளர் அடை யாள அட்டைக்கு விண்ணப்பிக்க லாம். உதாரணத்துக்கு ஏப்ரல்  1இல் 18 வயது பூர்த்தியடைந்திருந் தால், அடுத்த 3 மாதத்தில், அவர்க ளுடைய பெயர் வாக்காளர் பட்டிய லில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று சத்யபிரதா சாகு தெரிவித்தார்.