புதுக்கோட்டை, ஜூலை 5- வேங்கைவயலில் குடி நீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்ப வத்தில் டிஎன்ஏ பரிசோத னைக்கு மறுத்து வந்த 8 பேரும் புதன்கிழமை ரத்த மாதிரிகளை வழங்கினர். புதுக்கோட்டை மாவட் டம் வேங்கைவயலில் பட்டி யலின மக்கள் வசிக்கும் பகு தியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நடந்து 191 நாட்கள் ஆகிறது. இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. வழக்கை சிபிசிஐடி போலீ சார் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குற்ற வாளிகளை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள போலீசார் நீதிமன்றத்தை நாடினர். முதற்கட்டமாக 11 பேருக்கு டிஎன்ஏ பரி சோதனை மேற்கொள்ள நீதி மன்றம் அனுமதி அளித்தது. இதில் பட்டியலின மக்கள் 8 பேர், பாதிக்கப்பட்ட தங்க ளையே குற்றவாளிகளாக்க முயல்வதாக கூறி ரத்தமாதிரி கொடுக்க வரவில்லை. 3 பேர் மட்டுமே கொடுத்தனர். மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற் கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. 13 பேரின் டிஎன்ஏ பரிசோதனை முடி வுக்காக போலீசார் காத்தி ருக்கின்றனர்.
இந்நிலையில், மறுப்புத் தெரிவித்த 8 பேரில் ஒரு வரான முத்துகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் வழக்குத் தொடர்ந்தார். அதில், பாதிக்கப்பட்ட மக்க ளையே குற்றவாளியாக்க முயல்வதாக தெரிவித்தி ருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 8 பேரும் வழக்கு விசாரணை நடை பெறும் புதுக்கோட்டை வன் கொடுமை நீதிமன்றத்தை நாடி தீர்வுகாண உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 8 பேரும் கடந்த ஜூன் 30 அன்று புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜ ராகினர். அவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனைக்கான மனு நகலை வழங்கி, அதில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் ஜூலை 1 ஆம் தேதி மீண்டும் தங்களது விளக்கத்தைத் தெரிவிக்க லாம் என நீதிபதி ஜெயந்தி தெரிவித்தார். ஜூலை 1 அன்றும் பாதிக் கப்பட்ட மக்களையே குற்ற வாளிகளாகப் பார்ப்பதாக 8 பேரும் தெரிவித்தனர். அப் போது, விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி, வழக்கை அறி வியல் பூர்வமாக அணுக வேண்டி உள்ளதால் டிஎன்ஏ பரிசோதனை அவசியம் என் றார். மேலும், குறிப்பிட்ட 8 நபர்களுக்கு மட்டுமல் லாது, அந்தப் பகுதி கிரா மங்களைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் டிஎன்ஏ பரி சோதனை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜூலை 4 அன்று உத்தரவு பிறப்பிப்பதாக நீதி பதி கூறியிருந்தார்.
அதன்படி, ஜூலை 4 அன்று வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். போலீசார் தரப்பில் ஆய்வாளர் புவனேஸ்வரி ஆஜரானார். இதனைத் தொடர்ந்து, மறுப்பு தெரி வித்த 8 பேரும் டிஎன்ஏ பரி சோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். மறுநாளே 8 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் ரத்த மாதிரி களை கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து 8 பேரும் புதன்கிழமை புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுக்கு உடல் பரிசோதனை செய் யப்பட்ட பின்பு, 8 பேரும் ரத்த மாதிரிகளை கொடுத்தனர். ஏற்கனவே 13 பேரின் ரத்த மாதிரிகள் சென்னை யில் உள்ள அறிவியல் ஆய் வகத்திற்கு டிஎன்ஏ பரிசோத னைக்காக அனுப்பப்பட் டுள்ளது. தற்போது மேலும், 8 பேரின் ரத்த மாதிரிகளை போலீசார் அனுப்பி வைக்க உள்ளனர்.