14.3%
நியூயார்க், ஜன, 6- 2022-ஆம் ஆண்டில் உலக உணவுப் பொருட் களின் விலை வரலாறு காணாத உயர்வை எட்டி யது என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் மை அமைப்பு (எப்ஏஓ - FAO) தெரிவித்துள்ளது. எப்ஏ ஓ-வின் உணவு விலைக் குறியீடு 2022-ஆம் ஆண்டில் சராசரியாக 143.7 புள்ளி களாக உள்ளது. இந்த புள்ளி கள் கடந்த ஆண்டை ஒப்பிடு கையில் 14.3% அதிகமாகும். முக்கியமாக கடந்த 1990-ஆம் ஆண்டிலிருந்து உணவு விலைக் குறியீடு தரவுகளை உற்றுநோக்கி னால் 2022-ஆம் ஆண்டு மிகஅதிகமான அளவில் உணவு விலை உயர்வை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுல்தான்புரி மரண வழக்கு : மேலும் ஒருவர் சரண்
புதுதில்லி, ஜன.6- தில்லி சுல்தான்புரி பகுதி யில் புத்தாண்டு அன்று அதி காலையில் இருசக்கர வாக னத்தில் சென்ற 20 வயது பெண் மீது ஒரு கார் மோதி யது. விபத்து ஏற்பட்டதை கண்டுகொள்ளாமல், காருக் குள் கஞ்சா போதையில் இருந்தவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். விபத்தில் சிக்கிய அந்த பெண்ணின் ஆடை அவர் களது காரில் சிக்கியுள்ளது. கார் நிற்காமல் சென்றதால், அந்த பெண்ணின் ஆடை கிழிந்ததால் அவர் நிர்வாணமாக சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள் ளார். நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு ள்ள நிலையில், அங்குஷ் என்பவர் சுல்தான்புரி காவல் நிலையத்தில் வெள்ளியன்று சரணடைந்தார். இதன் மூலம் சுல்தான்புரி மரண வழக்கில் கைது செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.
ஆளுநருக்கு வைகோ கண்டனம்
சென்னை,ஜன,6- தமிழ்நாடு பெயரை மாற்றக்கோரும் ஆளுநர் ஆர்.என். ரவி தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு என்று சொல்வதைவிட, தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்கு ரியது. ‘தமிழ்நாடு’ என்று தொலை நோக்கோடு பேரறிஞர் அண்ணா சூட்டியப் பெயர் தமிழ் இலக்கியங்க ளிலே இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு என்றால், தமிழ் மொழியை நாடு; தமிழரை நாடு; தமிழ்ப் பண்பாட்டை நாடு என்று பொருள்படும். இது வெறும் பெயர் மட்டும் அல்ல, கோடானு கோடி தமிழ் மக்களின் இரத்த நாளங்களில் கலந்திருக்கின்ற தமிழ் உணர்வுதான் ‘தமிழ்நாடு’ என்று மலர்ந்தது. ஆளுநர் ரவி எல்லை மீறி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. தமிழ்நாடு பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று கூறிய கருத்தை அவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டு மக்களும் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படும் ஆளுநர்: ஜவாஹிருல்லா
கும்பகோணம், ஜன.6- “பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டு வரு கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா விமர்சித் துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,“பாஜக ஆளும் மாநிலங்களை விட இந்தியாவில் கல்வி கற்றவர்கள் அதிகம் உள்ள பகுதியாக வும், தொழில் துறையில் வளர்ச்சி அடைந்த மாநிலமாகவும் தமிழகம் விளங்குகிறது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆட்சி செய்யும் கேரளாவி லும் கல்வி வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.”என்றார். தமிழகத்தில் நடைமுறைப்படுத் தப்பட்டு வரும் சமூக நீதிக் கொள்கை யினால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. இந்நிலை யில், திமுக ஆட்சியால் மக்கள் ஏமாற்றப் பட்டிருப்பதாகத் தமிழக ஆளுநர் சமீபத்தில் அவரது மாளிகையில் கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது. இவர், பாஜகவின் கொள்கை பரப்பு செயலா ளராக செயல்பட்டும், அந்த மாளிகை யையும் துஷ்பிரயோகம் செய்கிறார். என்றும் அவர் கூறினார்.
ஈமச்சடங்கு நிதி ரூ.25,000 ஆக உயர்வு
புதுச்சேரி,ஜன.6- புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அட்டவணை மற்றும் பழங் குடி இனத்தவருக்கு வழங்கப் படும் “ஈமச்சடங்கு நிதியுதவி” உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான கோப்புக்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஈமச் சடங்கு நிதியுதவி ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிர மாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையில் திருத்தம் செய்யும் வகையில் ஆளுநர் ஒப்புதல் அளித் துள்ளார்.
தங்கம் விலை ரூ.304 குறைந்தது
சென்னை,ஜன.6- தங்கம் விலை கடந்த 31 ஆம் தேதி சவரனுக்கு ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலை தொடர்ந்து உயர்ந்து சவரனுக்கு ரூ.42 ஆயிரத்தை நெருங்கியது. இந்த நிலையில், வெள்ளியன்று (தங்கம் விலை குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.41 ஆயிரத்து 520-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயி ரத்து 190 ஆக உள்ளது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.73 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50-க்கு விற்கிறது.
உலகச் செய்திகள்
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கத்தை ஜெர்மனி அடைந்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வ புள்ளிவிபரங்களின்படி, 2022-ஆம் ஆண்டுக்கான பண வீக்கம் 7.9 விழுக்காடு என்று தெரிய வந்துள்ளது. எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்ததால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 1991-ஆம் ஆண்டில் இதுபோன்ற பணவீக்கம் இருந்தது. உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் தடைகளை அப்படியே ஏற்றுக்கொண்டதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவுடன் இணைந்து அணுஆயுதங்களைக் கொண்ட பயிற்சிகளை மேற்கொள்ளப் போவதாக தென் கொரியா உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அத்தகைய பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார். ஆனால், கூட்டாகத் திட்டமிடுவது, கூட்டுப் பயிற்சி உள்ளிட்ட செயல்பாடுகள் பற்றி பேச்சுவார்த்தைகள் நடந்திருப்பதாக தென் கொரிய ஜனாதிபதியின் ஆலோசகர் கிம் யுன் ஹியி கூறியுள்ளார்.
மியான்மரின் விடுதலை நாளை முன்னிட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் 7 ஆயிரத்து 12 பேர் நல்லெண்ண நடவடிக்கையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் அமைதி மற்றும் மனிதாபிமான அடிப்படை ஆகியவையே இவர்களின் விடுதலைக்குக் காரணம் என்று மியான்மரில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் ராணுவம் கூறியுள்ளது. ஜனநாயகத்திற்காகப் போராடி சிறைக்குச் சென்ற பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.