states

img

உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 22- உணவுப்பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வெள்ளியன்று (ஜூலை 22) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஜி.எஸ்.டி வரி என்ன என்பதே புரியாத நிலையில், தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் வரி விகிதம் அடித்தட்டு ஏழை, எளிய மக்களை வெகுவாக பாதிக்கும் என்பதாலும், கிராமப்புற சில்லறை வணிகர்கள் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலையும், குறுகிய காலத்தில் சில்லறை வணிகமே காணாமல் போகும் நிலை ஏற்படும் நிலையும் உருவாகியிருக்கிறது.   மேலும், 5 விழுக்காடு வரி  அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்படும் போது விலை வாசி உயர்வு கட்டாயம் தவிர்க்க  முடியாது. ஏற்கனவே பண மதிப்பிழப்பு, கொரோனா பேரிடர், ரஷ்யா-உக்ரைன் போர் என பல்வேறு பேரிடர் சூழல்களால் பாதிக் கப்பட்டுள்ள வணிகம் மற்றும் பொரு ளாதார சிதைவோடு ஏழைகளின் வாழ்வாதாரமும் சூறையாடும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

வேளாண் விளை பொருட்கள் மீதான செஸ் வரி விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் இடையே உள்ள உறவை சிதைப்பதோடு, உணவுப் பொருட்கள் மீது 1 விழுக்காடு வரி உயர்வும் செய்யப்பட்டு, அதனால் விலையேற்றமும், பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். 90 விழுக்காடு பொருட்கள் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படு கிறது. எனவே மாநில அரசு செஸ் வரி விதிப்பை மறுபரிசீலனை செய்து  செஸ் வரியை அறவே நீக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள், பொது மக்கள், விவசாயிகள், வணிகர்களின் நியாயமான கோரிக்கையை விரைந்து பரிசீலனை செய்து, 47ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்ட வரி உயர்வை ரத்து செய்து, அடித்தட்டு ஏழை, எளிய  மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலப் பொதுச் செய லாளர் வெ.கோவிந்தராஜூலு, மாநிலப்  பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.