states

தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமை: மதுரை முதலிடம்

சென்னை, மே 7- தமிழ்நாட்டில் தீண்டாமை வன்கொடு மைகள் அதிகம் கடைப்பிடிக்கப்படும் பத்து மாவட்டங்களில் மதுரை முதலிடம்  பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் தமிழகத்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படும் கிராமங்கள் உள்ளிட்டவை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு அவருக்கு பதில் அனுப்பப் பட்டிருந்தது.  அதன்படி, கடந்த ஆண்டு இறுதி வரை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அறிக்கையின்படி, தமிழகத்தில் தீண்டாமை பாகுபாடு கடைப்பிடிக்கப்படும் கிராமங்களின் எண்ணிக்கை 445ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக, மதுரை மாவட்டத்தில் 43 இடங்களிலும், அதற்கு  அடுத்தப்படியாக விழுப்புரம் மாவட்டத்தில் 25 இடங்களிலும், நெல்லை மாவட்டத்தில் 24  இடங்களிலும் தீண்டாமை வன்கொடுமை கள் அதிகம் நடப்பதாக அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஒரே ஒரு கிராமத்துடன் இந்த பட்டியலில் சென்னை கடைசி இடத்தில் இருக்கிறது.