states

img

கைவிடாத தீபாவளி விற்பனை: வர்த்தகர்கள் உற்சாகம் - ஜவுளி, இனிப்பு, பட்டாசு, தங்கம் ரூ. 60 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம்!

சென்னை, நவ.2- தமிழகம் முழுவதும் தீபாவளி பண் டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில், ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் விற்பனை ரூ. 60  ஆயிரம் கோடியை தாண்டியதாக கூறப்  படுகிறது. இதனால், வியாபாரிகள், விற்பனை யாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காலமாக இருந்தாலும், சென்னை மற்றும் புறநகர்  பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மழை இல்லை என்ப தால், தீபாவளி விற்பனை களைகட்டி யது. சென்னை மட்டுமின்றி, மதுரை, கோவை, சேலம், நெல்லை, தஞ்சாவூர்,  விருதுநகர் உள்ளிட்ட மாவட்  டங்களில் தீபாவளி வர்த்தகம் அமோக மாக நடந்துள்ளது. தீபாவளி பண்டிகையில் முக்கிய இடம்பெறுவது ஜவுளி. மக்கள் தங்க ளுக்கு பிடித்த ஜவுளிகளை ஆன்  லைனில் ஆர்டர் செய்து வாங்கும் பழக்  கம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு களை விட இந்த ஆண்டில் ஆன்லைன் வர்த்தகமும் சூடுபிடித்தது. அதே நேரம், சென்னை, மதுரை,  கோவை, திருப்பூர் உட்பட பல்வேறு பகு திகளில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.  சாலையோர கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இந்த தீபா வளிக்கு மாநிலம் முழுவதும் ஜவுளி விற்பனை மட்டும் சுமார் ரூ. 27 ஆயிரம்  கோடிக்கு நடந்திருக்கும் என மதிப்பி டப்படுகிறது. தீபாவளிக்கு வீடுகளில் அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் செய்  யப்பட்டாலும், மில்க் ஸ்வீட், வித்தியாச மான மைசூர் பாக் மற்றும் பல்வேறு  வகையான இனிப்புகள் வாங்குவதற் காக இனிப்பகங்களிலும் மக்கள் அதிக  அளவில் குவிந்தனர். மூலப்பொருட்க ளின் விலை அதிகரிப்பால் இனிப்புகள் விலை சற்று அதிகமாகவே இருந்தது. இனிப்பு, கார பலகாரங்கள் விற்பனை சுமார் ரூ. 10 ஆயிரம் கோடி வரை நடந்ததாக கூறப்படுகிறது. உளூந்தூர் பேட்டை, திருச்சி சமயபுரம், கோவில்பட்டி அடுத்த எட்ட யபுரம், தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தை கோடியூர், சேலம் மாவட்டம் வீரகனூர் உள்ளிட்ட இடங்களில் நடை பெற்ற ஆட்டுச் சந்தையில் சுமார் ரூ.  12 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. தங்கம் விற்பனையைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் விற்பனை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தங்கம் மட்டுமின்றி, வைரம், பிளாட்டினம், வெள்ளி விற்பனையும் சேர்த்து சுமார் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக கூறப்படு கிறது.  இதுதவிர, பூக்கள், பழங்கள், காய்கறிகள், மளிகைப் பொருட்கள், மின்னணு சாதனங் கள், செல்போன்கள், வீட்டு உபயோக பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட வற்றின் விற்பனையும் அமோகமாக நடந்தது. மொத்தத்தில் தீபாவளி விற்பனை ரூ.60 ஆயிரம் கோடியை தாண்டியதால் வியாபாரிகள், விற்பனையாளர்கள் உள்ளிட் டோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜிஎஸ்டி வரி வருவாய் 9% அதிகரிப்பு

2024 அக்டோபர் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ. 1 லட்சத்து 87 ஆயிரம் கோடி அளவிற்கு வசூலாகியுள்ளது. இது 8.9  சதவிகித உயர்வாகும். மேலும், 2017-இல் இந்த புதிய மறைமுக வரி முறை  அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை பதிவான இரண்டாவது அதிக வசூல் ஆகும். ஏனெனில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மிக அதிகபட்சமாக   ஜிஎஸ்டி வசூல் ரூ. 2.1 லட்சம் கோடி அளவிற்கு பதிவானது குறிப்பிடத்தக்  கது. தற்போதைய ஜிஎஸ்டி வருவாயில், மத்திய ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ. 33  ஆயிரத்து 821 கோடி. மாநில ஜிஎஸ்டி வருவாய் ரூ. 41 ஆயிரத்து 864  கோடி. ஒருங்கிணைந்த ஐஜிஎஸ்டி ரூ. 99 ஆயிரத்து 111 கோடி. செஸ் ரூ.  12 ஆயிரத்து 550 கோடி. ரீபண்ட் ரூ.19 ஆயிரத்து 306 கோடியைத்  தவிர்த்து விட்டுப் பார்த்தால் (இதுவும் கடந்தாண்டை விட 18.2 சதவிகி தம் அதிகம்), நிகர மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1 லட்சத்து 68 ஆயிரம்  கோடியாகும். 2024 அக்டோபரில் உள்ளூர் வர்த்தக பரிமாற்றத்திலும் ஜிஎஸ்டி வரி வரு வாய் 10.6 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இறக்குமதி மீதான வரி விதிப்பு  4 சதவிகிதம் அதிகரித்து ரூ.45 ஆயிரத்து 96 கோடியாக உயர்ந்துள்ளது.