புதுதில்லி, ஜன. 27 - கோதுமை விலை உயர்வைக் கட்டுப் படுத்த, 30 லட்சம் டன் கோதுமையை வெளிச்சந்தையில் விற்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு கோதுமை விளைச் சல் குறைந்ததால், அதன் விலை உயரத் தொடங்கியது. விலை உயர்வை கட்டுப்படுத்த கோதுமையை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. எனினும், இப்போதுவரை கோதுமை கட்டுக்குள் வந்ததாக இல்லை. சராசரியாக ஒரு கிலோ கோதுமை 50 ரூபாய் அள விற்கு உயர்ந்துள்ளது. கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்படும், விலைவாசி உயரும் என்று எதிர் பார்க்கப்பட்டாலும், அது இந்தள விற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப் படவில்லை. ஏற்றுமதிக்கு தடைவிதித் தாலே, விலை கட்டுக்குள் வந்துவிடும் என ஒன்றிய அரசு போட்ட கணக்கு தவ றானது. தற்போது கோதுமை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இது நாடு முழுவதும் முக்கியப் பிரச்சனையாக மாறிய நிலையில், கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா அண்மையில் தெரிவித்தார். இந்நிலையில், கோதுமை விலை உயர்வை குறைக்க வெளிச்சந்தையில் கோதுமையை விற்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஒன்றிய அரசு தனது சேமிப்பில் இருந்து 30 லட்சம் டன் கோதுமையை வெளிச்சந்தையில் விற்பனை செய்யும். ஒன்றிய அரசு நிறுவனமான இந்திய உணவுக் கழகம், அந்த கோது மையை மாவு மில்கள், தனியார் வர்த்த கர்கள் உள்ளிட்டோருக்கு வெளிச் சந்தையில் விற்பனை செய்யும். வெளிச் சந்தையில் கோதுமை வரத்தை அதி கரித்து, அதன் மூலம் விலையை குறைப்பதுதான் அரசின் நோக்கம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரேசன் மூலம் மக்களுக்கு நேர டியாக கோதுமையை வழங்காமல், வெளிச்சந்தையில் விற்பனைக்கு வழங்குவது பதுக்கலுக்கு வழி வகுக்கும் என்பதால், அரசின் முடிவு, கோதுமை விலை உயர்வை குறைப்ப தற்கு எந்தளவிற்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை.