சென்னை, அக்.5- திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினை விடம் அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் கடந்த ஆண்டு ஒர் அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, கருணா நிதிக்கு அமைக்கப்படவுள்ள நினைவிடத்தின் மாதிரி வரைபடத்தை ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், உதயசூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடமும், பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம் பெற்றிருந்தது. அதன்பிறகு, கருணாநிதி நினை விடத்தின் பின் பகுதியில் கடலுக்குள் 42 மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனு மதி அளித்தது. இந்த நினைவுச் சின்னம் கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு சென்ற டையும் வகையில் நினைவிடத்தில் இருந்து 290 மீ தூரத்திற்கு கடற்கரை, 360 மீ தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது. தற்போது மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் ஒன்றிய அரசின் அனு மதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்றத்துறை தமிழக பொதுப்பணித் துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இதில் ஒன்றிய அரசின் நிபுணர் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சுட்டிக் காட்டி இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம், இடர்பாடுகள் மதிப்பீட்டு அறிக்கை, பேரிடர் மேலாண்மை திட்டம் ஆகியவற்றை தயார் செய்து அனுப்பி வைக்க அறி வுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தையும் நடத்த வேண் டும் எனக் கூறப்பட்டுள்ளது.