states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் 100 கோடி டன் (1 பில்லியன் டன்) உணவை வீணடிக் கின்றனர் என ஐநா  சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) உணவு குறி யீட்டு அறிக்கையில் தக வல் வெளியாகியுள்ளது.
  2. ஹாங்காங்கில் அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் இன்று முதல் ரத்து செய்யப்படு வதாக அறிவிக்கப்பட்டு ள்ளது.
  3. பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான அனில் தேஷ்முக்கிற்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலை யில், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
  4. இரத்தத்தை எடுத்து ஓவியம் வரையும் பிளட் ஆர்ட் (BLOOD ART) நிறு வனங்களுக்கு தமிழ்நா ட்டில் தடை விதிக்கப்படு கிறது. தடையை மீறி பிளட் ஆர்ட் நிறுவனம் நடத்துபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமை ச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள் ளார்.
  5. வட இந்திய மாநிலங் களில் நிலவி வரும் பனி மூட்டம் காரணமாக 331 ரயில்களின் சேவை ரத்து.
  6. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள மஞ்சள் ஆற்று பாலத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
  7. “தமிழ்நாடு அரசியல் விவகாரங்களில் தலை யிட விரும்பவில்லை. இருப்பினும் மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட ஆளுநருக்கு அறிவுறுத்துவோம்” என - தமிழ்நாடு அரசு இயற் றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக் காதது குறித்த கேள்வி க்கு, காரைக்குடியில் விமான போக்குவரத்துத் துறை   அமைச்சர் வி.கே. சிங் கூறினார்.
  8. ஜனவரி மாதத்தில் கொ ரோனா அதிக பரவலாக மாறக் கூடும். அதாவது அடுத்த 40 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக  அதிகரிக்கக் கூடும் என ஒன்றிய சுகாதார அமைச் சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
  9. ஒடிசாவுக்கு சுற்றுலா வந்த ரஷ்யா நாடாளு மன்ற உறுப்பினர் பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ் ராயகடா பகு தியில் உள்ள ஹோட்ட லில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆன் டோவ் மரணம் தொடர் பாக விசாரணை நடை பெற்று வரும் நிலையில், பிரேத பரிசோதனை அறி க்கையில் உள்காயம் ஏற் பட்டதில் ஆன்டோவ் மரணம் அடைந்துள்ளார் என குறிப்பிடப் பட்டுள்ளது.
  10. அதிகபட்ச தயார் நிலையில் இருக்குமாறு செர்பியாவின் ராணுவத்திற்கு ஆணையிடப்பட்டுள்ளது. இதைச் செய்தியாளர்களிடம் தெரிவித்த அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மிலோஸ் உசெவிச், ‘‘முப்படைத் தளபதியும், ஜனாதிபதியுமான அலெக்சாண்டர் உசிச், இதற்கான ஆணையை வெளியிட்டுள்ளார்’’ என்று தெரிவித்தார். கொசோவாவில் நிலவும் குழப்பமான நிலையைக் கவனத்தில் கொண்டே இந்த ஆணை வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
  11. பிலிப்பைன்சில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 13 பேர் உயிரிழந்து விட்டனர். மேலும் 23 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். திடீர் மழையால் இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பிலிப்பைன்சின் தெற்கு மற்றும் கிழக்குப்பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அந்நாட்டிற்குச் சொந்தமான சில தீவுகளின் நிலப்பகுதிகள் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றன. தற்போது மழை நின்றிருப்பதால் வெள்ள அபாயம் தணிந்திருப்பதாக பிலிப்பைன்சின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரி வித்துள்ளது.
  12. தற்போது எழுந்துள்ள நெருக்கடியைச் சமாளிக்க ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளைப் போன்று ஒரு மணி நேரத்திற்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. அவசர, அவசரமாகக் கூடியுள்ள ஜப்பான் நாடாளுமன்றத்தில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்ச னை பற்றிய விவாதத்தில் பங்கேற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தமுரா தகாஷி இந்தக் கோரிக்கையை முன்வைத்துப் பேசினார். அந்ந நாடுகளில் பல மடங்கு அதிகமான ஊதியம் வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
  13.